Vadamalaisamy Lokanathan

Horror

2.8  

Vadamalaisamy Lokanathan

Horror

திகில்

திகில்

2 mins
337



வாசல் கதவை திறந்து பார்த்த சசிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.

காலிங் பெல் சத்தம் கேட்டு தான் கதவை திறந்து பார்த்தாள்.

கணவன் வெளியூர் சென்ற நிலையில்,அவர் தான் வந்து விட்டார் என்று அவசரமாக வந்து திறந்தாள்.

வெளியில் யாரையும் காணவில்லை.

காம்பவுண்டு கேட்டும் மூடி இருந்தது.

ஒரு வேளை பிரம்மையில் வந்து கதவை திறந்து விட்டோமா என்று நினைத்து கொண்டு,உள்ளே சென்று விட்டாள்.

ஒரே மகள் நித்யா அவளுடைய அறையில் தூங்கி கொண்டு இருந்தாள்.

சமையல் அறைக்குள் புகுந்து சூடாக காபி குடிக்க,அடுப்பில் பால் காய்ந்து கொண்டு இருந்தது.பால் சூடாவதை நிறுத்தி விட்டு, நித்யா வை கூப்பிட அவளுடைய அறைக்கு சென்ற சசி மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்க்க,யாரும் இல்லை.

பயந்து போய், நித்தியாவை எழுப்பி பல் தேய்த்து வர சொல்லி விட்டு காபி போட்டு இரண்டு டம்பளர் எடுத்து வந்து உட்கார, நித்தியாவும் வந்து உட்கார்ந்து காபி குடிக்க தொடங்கினார்கள்.

மீண்டும் அதே சத்தம்,இந்த முறை,நித்தியாவை,போய் பார்க்க சொன்னாள்.அவளும் பார்த்து விட்டு யாரும் இல்லை என்று கதவை மூட,மீண்டும் சத்தம்.

நித்யா விர்க்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

அவளுடைய போன் சார்ஜ் போட்டு இருந்தாள்.அது ஹாலில் இருந்தது 

என்னடி கேனதனமா சிரிக்கிற,நான் பயந்து போய் இருக்கேன்.உனக்கு என்னை பார்த்தா பைத்தியமா தெரிகிறதா என்று சத்தம் போட,அவள் தன்னுடிய போனை எடுத்து வந்து அருகில் அமர்ந்து அவளுக்கு வந்த goodmorning செய்திகளை காண்பிக்க,இதை எதுக்க எனக்கு காண்பிக்க ராய் என்று கேட்க,அவள் ஒவ்வொரு தடவை good morning செய்தி வரும் போது காலிங் பெல் சத்தத்தை ரிங்டோன் ஆக வைத்து இருந்தாள்.

அது தான் இவ்வளவு நேரம் சசியை பயமுறுத்தி கொண்டு இருந்தது.

அப்புறம் எதுக்கு போய் கதவை திறந்து பார்த்தா என்று கேட்க,செல் போனை மறந்து விட்டேன் என்று கூறி சிரித்தாள்.


Rate this content
Log in

Similar tamil story from Horror