STORYMIRROR

Sivakandan Thangarasu

Horror Crime Thriller

5  

Sivakandan Thangarasu

Horror Crime Thriller

வீடு

வீடு

4 mins
618

Sence    - 01

Place     - இருட்டான இடம்

Character - 2

Things    - 

Creative   - கேமரா வேகமா வரணும்..


ஒரு நாள் இரவு 11 மணி இருக்கும் இருள் சூழ்ந்த ஒரு கிராமம், அதில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் லைட் வெளிச்சம் தெரிந்தது.. அடர்ந்த காடு போன்ற ஒரு பகுதியில் இருந்து வேகமாக யாரோ போவது போல் இருந்தது.. அது அது ஒரு மொட்டை மாடியை நோக்கி சென்றது. அப்பொழுது அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமணம் என்பதால் பாடல் அதிக சத்தத்துடன் ஒளித்து கொண்டு இருந்தது.. திடீர் என்று மாடியில் இருந்து ஒரு சத்தம் எதையோ பார்த்து பயந்து இருவர் மாடியில் இருந்து கீழே விழுந்தனர். 


           { Titil வீடு }


Sence    - 02

Place     - பெரிய வீடு

Character - 7 to 10

Things    - blood

Creative   - 


  காலையில் வீட்டுக்கு வந்த நண்பர்கள் அதிர்ந்து போனார்கள்.. கார்த்தியும், ரம்யாவும், இறந்து போய் கிடந்தனர்.. இரவு நண்பர்களுடன் இருந்த பிரபு காலையில் வீட்டுக்கு வந்து பார்த்ததும் கதறி அழுதான்.. 


Sence    - 03

Place     - villege

Character - 4

Things    - 

Creative   - 


    ஊர் மக்கள் அனைவரும் ரோஜாவின் ஆவிதான் இவர்களையும் கொன்று இருக்கும் என்று ஆங்காங்கே அரசால் போரசலாக பேசினார்கள்.. ரோஜா யார் என்றால் சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை காதலித்ததால் ரோஜாவை அவள் பெற்றோர்கள் கொன்று விட்டனர். அதற்கு பிறகு ஊரில் யாராவது மர்மமான முறையில் இறந்து விட்டார்கள் என்றால் அவர்களை ரோஜாதான் கொன்று இருப்பாள் என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.. வாரத்தில் ஒரு முறையாவது அந்த ஆவியை யாராவது ஒருவர் பார்த்ததாக பயந்து போய் சொல்வார்கள்.. 


Sence    - 04

Place     - House

Character - 2

Things    - வீட்டு பொருட்கள்

Creative   - மீடியம் லைட்


    பிறகு இரவு ஆனது பிரபு தனிமையில் தன் அண்ணன் அண்ணியை நினைத்து சோகத்தில் அழ்ந்து இருந்தான்.. 1.30 மணி ஆகியும் அவன் உறங்காமல் விழித்துக்கொண்டு இருந்தான்.. அப்போது எதோ ஒரு சத்தம் கேட்டு ஜன்னல் அருகே பார்த்தான்.. அங்கே ஏதோ ஒரு உருவத்தின் நிழலை மட்டும் பார்த்த பிரபு சற்று பயம் கலந்த நடுக்கத்துடன் யார் அங்க யாருனு சொல்லுங்க கேட்டுட்டே இருக்குறன் பதில் சொல்லாம நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்.. மறுபடியும் தனது அழுத்தமான குரலில் டேய் யார்டா நீ இங்க என்ன பண்ற அப்படினு கேட்டுக்கொண்டு இருக்கும் போதே திடீர் என்று அவன் கண் முன் அந்த உருவம் வந்து சென்றது.. அந்த ஒரு நிமிடம் பிரபு மிகவும் பயந்து விட்டான்.. வேர்த்து விருவிருத்து போய் நின்றிருந்தான். அப்பொழுது ஒரு குரல் அதுவும் பெண் குரல் உன் அண்ணன் போன இடத்துக்கே நீயும் போக விரும்புகிறாயா.. அதை கேட்டதும் பிரபுக்கு பயம் அதிகம் ஆனது.. யாரா இருக்கும் என்று பயத்தோடு யோசித்து கொண்டு இருந்தான் பிரபு திடீர் என்று வீட்டில் உள்ள அனைத்து பொருளும் தானாக உடைந்தது.. அப்பொழுதும் தொடர்ந்து அந்த குரல் ஒளித்து கொண்டு இருந்தது.. பத்து வருஷமா நா இந்த வீட்ல இருக்குரன் திடீர்னு நீங்க வந்தா நா விட்டுட்டு போகணுமா.. முடியாது என்னால இந்த வீட்ட விட்டு போக முடியாது.. ஒன்னு நீ போய்டு இல்ல செத்து போய்டுவ.. அன்று இரவு முழுவதும் பிரபுவுக்கு அந்த ஆவி பல இடைவுறுகளையும் பயத்தையும் கொடுத்துக்கொண்டு இருந்தது.. 


Sence    - 05

Place     - House

Character - 1

Things    - Phone

Creative   - 


  மறுநாள் காலை பொழுது தொடங்கியது.. இரவு முழுவதும் துங்காத அசதியும் ஆவியின் பயத்தாலும் ரொம்ப சோர்ந்து போய் இருந்தான்.. அப்பொழுதுதான் பிரபு ஆவியை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நேரயா பதிவுகளை கூகுளில் தேடினான்.. அவன் படித்த அனைத்து நாவல்களும் அறிஞர்களும் ஒண்ணுக்கு பின் முரனாகதான் குறிப்பிட்டு இருந்தார்கள்.. அதையெல்லாம் படித்த பிரபு முகவும் குழம்பி போனான்.. இருக்கா இல்லையா இருக்கா இல்லையா இருக்கா இல்லையா இருக்கா இல்லையா என்று யோசித்து கடைசியில் இருக்காது என்ற முடிவுக்கு வந்தான்.. நடந்ததை எல்லாம் தெளிவாக யோசித்து அவனது அண்ணன் அண்ணி கடைசியாக மாடியில் நின்றிருந்த இடத்திற்கு சென்றான்.. அங்கே எவ்வளவு தேடியும் ஒரு ஆதாரமும் கிடைக்க வில்லை.. கடைசியாக செவற்றை சற்று கவனித்தான் அதில் ஒன்று என்று ஒரு நம்பர் இருந்தது.. அந்த நம்பர் எப்பொழுதோ எழுதி இருக்கலாம் என்று நினைத்தான்.. ஆனால் அவன் இன்னொரு விஷயத்தையும் யோசித்தான்.. அந்த நம்பரை எங்கேயோ பார்த்த ஞாபகம்.. நன்றாக யோசித்தால் தான் தெரிந்தது அந்த நம்பர் தன் அண்ணன் செத்து போய் கீழே கிடந்த அப்ப அண்ணன் உடம்பில் இருந்து வந்த இரத்தத்தால் ஒன்று என்று அந்த நம்பரை எழுதி இருந்தான்.. பிரபு மாடியில் எழுதி இருக்கும் அந்த நம்பரையும் அண்ணன் தான் எழுதி இருக்க வேண்டும் என்று யோசித்தான்.. 


Sence    - 06

Place     - House

Character - 4

Things    - Phone, லைட் switch

Creative   - மீடியம் லைட்


ஆழ்ந்த யோசனைக்கு பிறகு தன்னிடம் அண்ணன் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒன்று பிரபுவிற்கு வந்தது.. நமக்கெல்லாம் மாமா { ரமேஷ் } தான் முதல்ல மாமா பேச்ச மீறி நாம் எதுவும் செய்யக்கூடாது, நம்ம குடும்பத்துக்கே மாமாதான் நம்பர் ஒன்.. அந்த நம்பர் ஒன் என்ற வார்த்தை பலமாக அவன் நினைவுக்கு வந்தது.. அண்ணனை கொன்றது ரமேஷ் தான் என்று 90 சதவிகிதம் உறுதி செய்து கொண்டான்.. மீதி உள்ள சந்தேங்கங்களை தீர்த்துக்கொள்ள ஒரு பிளான் செய்தான்.. இரவு 8 மணி இருக்கும் தன் நண்பர்களுக்கு போன் செய்து மச்சான் யாருக்கும் தெரியாமல் சேவர் ஏறி குதித்து என் வீட்டுக்குள் வாடா என்று மூன்று நண்பர்களை வரவழைத்தான்.. தன் நண்பர்களிடம் அனைத்தையும் கூறினான்.. 


நண்பர் 1 :- இப்போ நாம என்னடா செய்யறது..


பிரபு :- அதான் மச்சான் உங்களை வர வச்சன், யாங்கிட்ட ஒரு நல்ல பிளான் இருக்குடா..


நண்பர் 2 :- என்ன பிளான் மச்சி சொல்றா உனக்காக என்ன வேணாலும் செய்றோம்..


பிரபு :- சொல்ரண்டா, இன்னைக்கு நைட்டு அந்தால் எப்படியும் என்ன மிறட்டுவதற்கு இங்க வருவான்.. அப்போ அவன் வெளில இருக்குற பிளக் போர்டுல மெய்ன் பட்டனை ஆப் செய்து விடுவான்.. அப்போ நீ அந்த இடத்திலேயே மறந்துகொள்.. பின்பு அவன் உள்ள வந்ததும் நா சொல்லும் போது ஆன் பண்ணு.. நம்ம நாலு பேரும் கான்பரன்ஸ் ல இருப்போம்.. 

நண்பர் 3 :- ஓகே மச்சான் இன்னைக்கு செத்தான் அவன்..


Sence    - 07

Place     - House

Character - 5

Things    - மீடியம் லைட்

Creative   - 


அவர்கள் எதிர் பார்த்தது போல ரமேஷ் இரவு 12 மணிக்கு மேல் வந்தான்.. அப்பொழுது திடீரென்று பவர் ஆஃப் ஆனது ( மெய்ன் பட்டனை ஆப் செய்து விட்டான் ) இவர்களும் வீட்டிற்குள் தனி தனியாக மறைந்து கொண்டனர்.. பிறகு யாரும் அதிகம் பயன்படுத்தாத ஒரு வழியின் வழியே உள்ளே வந்தான் ரமேஷ்.. அப்பொழுதுதான் இவர்களுக்கே தெரிந்தது இந்த வழியாகத்தான் இவன் இரவில் உள்ளே வரானா என்று.. பின் நேற்றை போல பிரபுவை மிரட்டினான்.. நான் அவ்வளவு சொல்லியும் நீ இன்னும் இந்த வீட்டில் இருக்கிறாயா உனக்கு எவ்வளவு திமீர் இருக்கணும்.. இன்னைக்கு செத்த டா நீ.. என்று பலமாக ஒரு குரல் ஒலித்தது.. 


பிரபு :- நீ யாருனு சொல்லு இந்த வீட்டை உன்னிடம் கொடுத்துட்டு நா போய்டுரன்.. 


ரமேஷ்:- நா யாருனு ஊர்ல சொல்லி இருப்பாங்கலே.. 


இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பிரபு முணுமுணுத்தான் மச்சான் லைட்ட போடுடா என்று.. அடுத்த செகெண்டே வீட்டிற்குள் இருந்த அனைத்து லைட்டும் எறிந்தது.. திகைத்து போய் நின்றான் ரமேஷ்.. பிரபுவின் நன்பர்கள் அனைவரும் ரமேஷை சுற்றி வளைத்தனர்.. மிரண்டு போய் நின்றான் ரமேஷ்.. ஓங்கி ஒரு அறை விட்டான் பிரபு.. ஏண்டா ஏன் அண்ணா அண்ணியை கொன்ன என்று நொந்துபோய் அதிபயங்கர கோபத்தோடு அழுது கொண்டே கேட்டான்.. வசமாக மாட்டிக்கொண்ட ரமேஷ் வேற வழி இல்லாமல் சொல்கிறேன் என்று கதை சொல்ல ஆரம்பித்தான்.. 


Sence    - 08

Place     - Village

Character - 5

Things    - 

Creative   - விஷுவல் புட்டேஜ்


நீங்களெல்லாம் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே வெளி ஊர்ல போய் செட்டில் ஆகிட்டிங்க.. உங்க சொத்து வீடு எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருந்த எனக்கு உங்க அப்பா அம்மா இறந்த பிறகு எல்லாத்தையும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சொந்த மாக்கிகொள்ள வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்தது.. ஆனா அந்த ஆசை நிறைவேறாத மாதிரி நீங்க வந்து இங்கேயே நாங்க தங்க போரோம் என்று என்னிடம் கூறினீர்கள்.. அதை கேட்டு என் மனம் ஆத்திரம் அடைந்து விட்டது.. அப்பொழுதுதான் உங்களை கொள்ள வேண்டும் என்ற கொடூர முடிவுக்கு நான் தல்லப்பட்டேன்.. பிறகுதான் உன் அண்ணனையும் அண்ணியையும் கொலை செய்தேன்.. உன்னை பார்க்க பாவமாக இருந்தது அதனால்தான் உன்னை கொள்ளாமல் பயம் படுத்தினேன்.. பின்பு இவர்கள் நான்கு பேரும் ரமேஷை அடித்து போலீசில் ஒப்படைததனர்.. 


            -- Titil Card --


   -----   இந்த உலகத்தில் ஆவிகளுக்கு இருக்கும் நல்ல எண்ணங்கள் கூட இந்த கொடூர புத்தி கொண்ட மனிதர்களுக்கு கிடையாது.. உழைக்கும் எண்ணம் உங்களிடம் இருந்தால் மற்றவர்கள் சொத்திர்க்கு ஆசை பட மாட்டீர்கள்.. உழைத்தே உண்ணுங்கள் நீங்கள் உண்மையாக இருப்பீர்கள்.. -----


          சிவகண்டன்.த


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

More tamil story from Sivakandan Thangarasu

ஆசை

ஆசை

3 mins படிக்க

இரவு

இரவு

4 mins படிக்க

சட்டம்

சட்டம்

6 mins படிக்க

வீடு

வீடு

4 mins படிக்க

மாயம்

மாயம்

2 mins படிக்க

Similar tamil story from Horror