Gowthaman V

Horror Crime Thriller

4.8  

Gowthaman V

Horror Crime Thriller

ரத்த வேட்டை!

ரத்த வேட்டை!

8 mins
684


ரத்த வேட்டை!


இருட்டூர் நதியை ஒட்டிய சிறு கிராமம். அதன் பெயரை போலவே அனைத்து வசதிகளிலும் இருண்டு தான் இருந்தது அந்த கிராமம். அந்த நதியை ஒட்டி பல குக்கிராமங்கள் இருந்தன. அவர்களின் நிலையோ இருட்டூரை விட தேய்ந்து போய் இருந்தது.

              இருட்டூரை அடுத்து 2மணி நேர பயணத்தில் ஒரு நகரம் இருந்தது. ஆனால் அங்கு தொழிற்சாலைகள் தான் எங்கும். அங்கு தொழிற்சாலைகளின் காவல்காரர்களின் குடும்பங்களை தவிர யாரும் இருப்பதில்லை. அந்த குடும்பங்களும் விடுமுறையில் சில நாட்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றுவிடுவர். அந்த நகரத்தின் பெயரே தொழில் நகரம் தான்.

              இங்கு என்னதான் பல தொழிற்சாலைகள் இருந்தாலும், அங்குள்ள இறைச்சி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைதான் பிரபலம், பெரிதும் கூட. அந்த தொழிற்சாலைகளின் காவலாளிகளின் எண்ணிக்கை மட்டும் மற்ற தொழிற்சாலைகளை விட மிக மிக அதிகம்.

             இருட்டூரில் இந்த நிறுவனத்திற்கென்றே இறைச்சிக்காக ஆடு கோழி மாடுகளை வளர்ப்பவர்கள் சில பேர் இருந்தனர். அவர்கள் அதன் மூலம் அந்த கிராமத்தின் பணக்காரர்களாக திகழ்ந்தனர். அவர்கள் மூலம் தான் இந்த தொழில் நகரமே வேலை ஆட்களை தேர்வுசெய்தது.இதனால் அந்த நபர்களின் சொல்லுக்கு கிராம மக்கள் கட்டுப்பட்டு நடந்து வந்தனர்.

             என்னதான் விவசாயம் செழித்தாலும் அதன் அறுவடையை அங்குள்ள பணக்காரர்கள் மூலம் ஏமாற்றி வாங்கியது தொழில்நகரம். அவர்களுக்கு ஒரு பங்கு பணமும் தந்து ஊர்மக்களை ஏமாற்றியது. தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்தாலும் வேறு வழியில்லாமல் வாழ்ந்து வந்தனர். ஏன் என்றால், வேறு இடத்தில் விற்க நதியை சுற்றி இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். அதற்குண்டான செலவிற்கு பயந்து பேசாமல் இங்கேயே விற்கிறார்கள்.

               நதியை கடந்தால் இவர்கள் துன்பம் மறைந்து விடியல் ஏற்படும். அதற்கு குறுக்கே பாலம் கட்ட வேண்டும் ஆனால் பாலம் கட்டினால் மக்கள் வேறு உலகத்தை நாடி தொழில் நகரத்தை மறந்துவிடுவார்கள் என்று தொழில்நகரத்து முதலாளிகள் அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு லஞ்சம் கொடுத்து பாலம் வராமல் பார்த்துக் கொள்கின்றனர். 

             சாலை வசதிகள் இல்லாததால் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைதான் கிராம மக்கள் வேலை செய்வர்.பிறகு இருட்டுவதற்குள் கிராமத்திற்கு திரும்பிவிடுவர். 

              தினமும் 5 மணிக்கு பிறகு அங்கு காவலாளிகளின் குடும்பங்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். நிறைய தொழிற்சாலைகள் இயங்குவதால் ஒரு சிறு கிராமம் போலவே அனைத்து காவலர்களின் குடும்பங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய இருந்தனர். அவர்களுக்கு விடுமுறை வந்தால் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருவர். 

                அந்த இறைச்சி நிறுவனம் பெரியது என்பதால் அங்கு மற்ற தொழிற்சாலைகளை விட நிறைய காவலாளிகள் இருந்தனர். அவர்களின் குடும்பமும் இருக்கும். அதில் சிலர் திருமணம் ஆனவர்கள் சிலர் திருமணம் ஆகாதவர்கள். திருமணம் ஆகாதவர்கள் வீட்டுக்கு ஐந்து நபர்கள் வீதம் இருந்தனர். மற்றவர்கள் வழக்கம்போல் குடும்பங்களாய் இருந்தனர். ஆண்டிற்கு மூன்று முறை விடுமுறை விடப்படும் மொத்தம் 27 நாட்கள். இது கல்யாணமானவர்களுக்கு மட்டும், கல்யாணமாகாதவர்களுக்கு 18 நாட்கள் மட்டும் விடுமுறை.

              இது இப்படி போக ஒருநாள் விடுமுறைக்காக அங்கிருந்த கல்யாணமானவர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது கல்யாணமாகாத 8 நபர்கள் மட்டுமே அந்த தொழிற்சாலையில் இருந்தனர். மற்ற கல்யாணமாகாதவர்கள் 18 நபர்கள் வீடுகளில் இருந்தனர் விடுமுறை காவலாளிகளுக்கு மட்டுமே யன்றி அனைவருக்கும் கிடையாது.   

     

              அன்று வழக்கம்போல் காலையில் நிறுவனம் தொடங்கியது. வழக்கம்போல வேலைக்கு வந்தவர்கள் அவரவர் இடத்திற்கு சென்றனர். திடீரென்று ஒரு அலறல் அந்த நிறுவனத்தையே நடுங்க வைத்தது.என்ன ஏது என்று அனைவரும் திகைத்து சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் உறைய வைத்தது.

            ஆம்! அங்கு ஒரு மனித உடல் தோல் உரிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடு மாடுகளை போல தொங்கி கொண்டு இருந்தது. அதை பார்த்த பெண்கள் அனைவரும் கத்தி கூச்சல் போட ஆரம்பித்தார்கள். 

             போலீஸுக்கு தகவல் தரப்பட்டது. நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டது. போலீஸ் வந்தது இது தனிமனிதனால் சாத்தியமில்லை கும்பலாக சேர்ந்துதான் செய்து இருப்பார்கள் என்று கூறியது.மேலும் இறந்தது யார் என்று பார்த்ததில் அது அந்த எட்டு காவலாளிகளில் ஒருவன் என்பது தெரிந்தது. ஒருவன் இங்கே என்றால் மற்ற 7 நபர்கள் எங்கே என்று கேட்டனர். அன்று வேலைக்கு வந்த 9 பேர்," இல்லை அவர்கள் நாங்கள் வரும்போது இங்கே இல்லவே இல்லை. உங்களிடம் தெரிவிப்பதற்குள் இது நடந்துவிட்டது "என்றனர்.

          போலீஸ் உடனே அந்த 7 பேர் தான் இதனை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கனும் என்று நினைத்தனர். அந்த நிறுவனத்தை சீல் செய்தனர். காவலுக்கு 25காவலர்களை நியமித்தனர். அனைத்து காவலர்களும் விசாரிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

          அடுத்தநாள், காவல் காத்த போலீஸ் காவலர்கள் அனைவரும் பதறியடித்து காவல்நிலையத்திற்கு போன் செய்தனர். தலைமை காவலர், காவல் ஆய்வாளர் என்று அனைவரும் பதறியடித்து ஒடி வந்தனர். வந்து பார்த்தவர்கள் அனைவரும் முதுகெலும்பு சில்லிட திகைத்து நின்றனர். ஆம் இம்முறை தோல்கள் உரிக்கப்பட்டு உடல் இரண்டாக குறுக்கே வெட்டப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஆடிக்கொண்டிருந்தது. 

            மருத்துவர்கள் வந்து உடற்கூறாய்வு செய்துவிட்டு மிரண்டு போயினர். அவர்கள் சொன்னது, "இவர்களின் தோல் உயிரோடு பிய்த்து எடுக்கப்பட்டிருக்கு , உடல் உயிரோடு இரண்டாக பிளக்கப்பட்டு துடிக்க துடிக்க தொங்கவிடப்பட்டுள்ளது" என்றனர். இதை கேட்ட அனைவரும் பயத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். காவல்துறை காவலர்களோ அங்கு இருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தனர். இதற்கிடையில் அந்த நிறுவனத்தின் முதலாளி வந்து சேராந்தார். அவர் இறந்தவர் அந்த 7 காவலாளிகளில் ஒருவன் என்றார். எப்படி என்றால் அந்த காவலாளியின் பெயர் பேட்ச் அங்கே உடைந்து சிதறி கிடந்தது.

             செய்வதறியாமல் திகைத்து இருந்த போது காவல் ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி யை ஆராய்ந்தார். அதில் அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. புகை போல் ஒரு உருவம் கொடூரமாக அந்த கொடூர செயலை செய்துக்கொண்டிருந்தது சிசிடிவியில். உடனே இவர் கோபத்தின் உச்சிக்கு சென்று அங்கு பணியிலிருந்த போலீஸ் காவலர்களை கூப்பிட்டு கத்தினார். " இவ்வளவு நடந்து இருக்கிறது. அவர்கள் எப்படி உள்ளே வந்தனர் அவன் கிழிக்கப்படும் கத்தல் உங்களுக்கு கேட்கவில்லையா ? எங்கே சென்று இருந்தீர்கள்? தூங்கி இருந்தால் கூட இறந்தவன் கத்திய அலறலில் எழுந்திருக்க கூடுமே?". 

               அவர்கள் கூறிய பதில் ஆய்வாளரை ஒருநிமிடம் மயக்கநிலைக்கு கொண்டு சென்றது.அவர்கள் சொன்னது,"இங்கேதான் இருந்தோம்! ஏன் இந்த உடல் கொலை செய்யப்பட்டதாய் சிசிடிவியில் காண்பிக்கும் நேரம் இடம் நாங்களும் அங்கேதான் இருந்தோம். சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது என்றால் நாங்களும் பதிவாகி இருப்போமே என்றனர்" அங்கு காவல் இருந்த இருவர். உடனே சிசிடிவியை பேக்வேர்டு செய்த ஆய்வாளர் மிரண்டே போய்விட்டார். 

           ஆம்! அவரின் காவலர்கள் கீழே தான் குறுக்கும் நெடுக்குமாக நடந்து காவல் காத்துக்கொண்டு இருந்தனர் அவர்களின் தலைக்கு மேலே தான் சம்பவம் நடந்துக்கொண்டிருந்தது. இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்‌. அங்கு காவல் காத்த காவலர்கள் மயக்கம் போட்டே விழுந்து விட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு யோசனையில் அமர்ந்தார் ஆய்வாளர்.

            இன்னும்‌ 6 நபர்கள் உள்ளனர் எப்படியும் 6 நாள் தொடரும். எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டார்.

           இதற்கிடையில் பக்கத்து கிராமங்களில் சிறு சிறு பிள்ளைகள், இளம்பெண்கள் காணாமல் போக தொடங்கி இரண்டு வாரம் ஆகியுள்ளது. இதுவரை 16 பேர் காணாமல் போய் இருந்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னாடியும் 2 சிறுவர்கள ஒரு இளம்பெண் காணாமல் போயிருந்தனர். இரண்டு பக்கமும் எதுவும் தடயம் கிடைக்காமல் தலையே வெடித்து விடும் போலிருந்தது காவல் ஆய்வாளருக்கு.

           அன்று இருள் வந்தது. ஆய்வாளர் தானே களம் இறங்கி‌ காவல் காக்க‌தொடங்கினார். சிசிடிவிகளை நோட்டமிட்டப்படி கண்முழித்து காத்துக்கொண்டிருந்தார். மற்ற போலீஸ் காவலர்களும் மொபைல் போனில் காமிராவை ஆன்‌செய்து கண்காணித்தனர். அன்று இரவு முடிந்தது. சூரியன் உதிக்க தொடங்கியது. 

          வெளிச்சம் வந்ததும் அனைத்து இடத்திலும் தேடி பாரத்துவிட்டு போலீஸ் காவலர்கள் ஆய்வாளரிடம் இன்று எதுவும் நடக்கவிலலை என்று கூற ஒடி வந்தனர். ஆய்வாளர் இன்னமும் சிசிடிவிகளை ஆராய்ந்துக்கொணடிருந்தார். 

          ஓடி வந்தவர்கள் ஆய்வாளர் அறையை திறந்தவுடன் அப்படியே உறைந்து போய் நின்றனர். ஆய்வாளர் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர் மிரண்டு போய் நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார். 

          ஆம்! கீழே ஒரே ரத்தமும் சதைகளும் சிதறி கிடந்தன். துண்டு துண்டாக வெட்டப்பட்டு குவிக்கப்பட்டு அதன் மேல் மனித தலைகள் இரண்டு வைக்கப்பட்டு இருந்தது. அதுவரை ரத்தவாடையோ நாற்றமோ வராமல் இருந்தது. அவர்கள் அதை கண்ட பத்தாவது நிமிடம் நாற்றம் குடலை பிடுங்கியது. 

          அனைத்து இடத்திலும் சிசிடிவி இருந்தது போனில் காமிராவில் கண்காணித்தனர் ஆனால் சிசிடிவி கண்காணிப்பு அறையில் ஒரு காமிரா இல்லை என்பது அப்போதுதான் புரிந்தது.

         இம்முறை இறந்து கிடந்தது இரண்டு பேர். அவர்களும் காணாமல் போன தொழிற்சாலை காவலர்கள் தான்.

         பிணத்துண்டுகளை அப்புறப்படுத்தியபின் அந்த இடத்தில் ஏதோ கிறுக்கி இருந்தது. அதை கவனித்தவருக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அதில் "இன்னும் 9 நபர்கள் மீதம்" என்று இருந்தது. காணாமல் போனவர்கள் 8பேர் இறந்தது 4 பேர் அப்படியிருக்க எப்படி 9 பேர் மீதம் என்று குழம்பினார்.

         இதற்கிடையில் எந்த தடயமும் இல்லாமல் தினம் தினம் பிணங்கள் குவிவதை கண்டுபிடிக்க முடியாமல் அந்த தொழிற்சாலை காவலர்கள் தங்கியிருந்த வீட்டை மீண்டும் ஆய்வு செய்ய சென்றார்.

        அங்கே ஏதாவது தடயம் கிடைக்குமா என்று சிந்தித்தவாறே சென்றவருக்கு ஒன்று அவரின் மனதில் உறுத்தியது. அது எல்லா வீடுகளிலும் 5 நபர்கள் தான் இங்கு மட்டும் ஏன் 8நபர்? என்ற கேள்வியும், இந்த வீடு மட்டும் தொழிற்சாலையின் பின்புறத்திலே உள்ளது ஏன் என்ற கேள்வியும்? தான்.

        உடனே அவசரம் அவசரமாக அவர்கள் இருந்த வீட்டை ஆராய்ந்தார். இம்முறை மிக மிக கவனமாக! அப்போது கீழே தரையில் ஒரு சுரங்கம் இருப்பதை கவனித்தார்.போன முறை இதை கவனிக்கவில்லை ஏன்‌என்றால் அது அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. உடனே அதை திறக்க போனார. திறக்க போனவர் உடனே அங்கிருந்த போலீஸ் காவலர்களை உதவிக்கு அழைத்தார் வாக்கி டாக்கியில்.உடனே அடுத்த ஐந்தாவது நிமிடம் அனைவரும் அங்கு கூடினர். மிகவும் திகிலுடன்.

        இரண்டு காவலர்களை கொண்டு அதை திறந்தார். உள்ளே படிக்கட்டுகள் இருந்தன. உள்ளே ஆயுதங்களுடன் சில போலீஸ் காவலர்களை துணைக்கொண்டு இறங்கினார். உள்ளே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார். ஆம்! அங்கே சிறுவர்கள் இருவர் ஒரு இளம்பெண் என்று மூவர் இருந்தனர் வாய் கட்டப்பட்டு நிர்வாணமாய். உடனே அவர்களுக்கு உடைகளை தர மேலே இருந்தவர்களிடம் கூறினார். அங்கிருந்த சில உடைகளை கொண்டு அவர்களுக்கு உதவி செய்தனர். 

          அந்த மூன்று பேர்களையும் இப்போதைக்கு யார் கண்ணிலும் பட வேண்டாம் என்று அவரே மனதில் நினைத்து கொண்டு அவர்களை அவரே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்களின் நிலை விசாரிக்கும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து இருந்தார். இதற்கிடையில் அங்கே அந்த நிறுவனத்தின் முதலாளியும் அவரது பார்ட்னரும் வியர்த்து விறுவிறுக்க வந்து இறங்கினர். அதற்குள் ஆய்வாளர் வெளியே சென்றுவிட்டார் அந்த குழந்தைகளுடன். 

           யாருக்கும் தெரியாமல் தன் மருத்துவ நண்பரை சந்தித்து இரு குழந்தைகளுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் யாரும் அறியாதவாறு சிகிச்சை செய்யுங்கள். இவர்கள் என் உறவினர்களின் குழந்தைகள், எதையோ பார்த்து பயந்து உள்ளனர் என்று கூறினார். நான் நாளை வருகிறேன் என்று கூறிவிட்டு அவசர அவசரமாக தொழிற்சாலைக்கு திரும்பினார் காவல் ஆய்வாளர்.நண்பரோ , ஆய்வாளர் எதையோ மறைக்கிறார் இருந்தாலும் என்னிடமே மறைக்கிறார் என்றால் அது நல்லதுக்காக தான் இருக்கும், அவர் என் நீண்ட கால நண்பர் என்று நினைத்து கொண்டு தன் கடமையை செய்ய சென்றார்.

            தொழிற்சாலைக்கு திரும்பிய காவல் ஆய்வாளர் அங்கு முதலாளியும் அவரின் பார்ட்னரும் வியர்த்து விறுவிறுக்க நிற்பதை பார்த்து தன் புருவத்தை உயர்த்தி யோசித்தார். பிறகு அவர்கள் இவரை நோக்கி ஓடிவருவதை கண்டு சுதாரித்து" நீங்கள் இங்கே இந்த நேரத்தில் எப்படி" என்று கேட்டார்.

           அதற்கு முதலாளியின் பார்டனரோ " யார் அந்த குழந்தைகள்? இளம்பெண் யார்? எங்கே அவர்கள் அவர்கள் தான் எங்கள் தொழிலாளிகளின் கொலைகளுக்கு காரணமா" என்று கேள்விகளை அடுக்கினார். அதற்குள் மேலும் அவர் தொடராதபடி முகத்தில் கோபத்தை காண்பித்து பார்ட்னரை அடக்கினார் முதலாளி. அனைத்தையும் கவனித்தும் கவனிக்காததை போல இருந்தார் காவல் ஆய்வாளர்.

           உடனே அந்த முதலாளி " இங்கே தற்செயலாக தான் வந்தோம் என்ன நிலவரம் என்று பார்க்க! வந்த இடத்தில் அனைவரும் கலவரமாய் இருந்ததை கண்டு நிலவரத்தை அறிந்தோம் " என்று பொய் கூறினார் எந்த காவலர்களும் பக்கத்தில் இல்லாததை தனக்கு சாதமாக்கி கொண்டு.

           அதற்கு அந்த ஆய்வாளர் அது ஒன்றுமில்லை அந்த குழந்தைகள் பேயை பார்க்க ஒரு இளம்பெண் உதவியுடன் இங்கே வந்துள்ளனர். ஆனால் யாரோ அவர்களை அந்த வீட்டின் சுரங்கத்தில் அடைத்து வைத்துள்ளனர். அநேகமாக இறந்த காவலர்களாக தான் இருக்கும் என்று கூறிவிட்டு அவர்கள் இருவரையும் நோட்டமிட்டார்.

            இருவரும், எங்கே அவர் தங்களை நெருங்கிவிடுவாரோ என்று நினைத்து," நாங்கள் நாளை வருகிறோம் அவசர மீட்டிங் உள்ளது " என்று கூறி நழுவினர்.

           காவல் ஆய்வாளரோ இவர்களுக்கு பின்னால் உள்ள ரகசியத்தை கூடிய சீக்கிரம் கண்டுபிடித்தால் எல்லாவற்றிற்கும் முடிவு வரும் என்று அவரின் காவல் படையை நோக்கி சென்றார். அங்கு வந்தவர் அவர்களிடம் யார் அவர்களுக்கு தகவல் தந்தது என்று கேட்டார் கடும் கோபத்துடன். அதற்கு அனைவரும் ஒரே குரலில் நாங்கள் இல்லை என்று பதில் கூறினர். சிறிது யோசித்தவர் சட்டென்று நேற்று மயக்கமடைந்த காவலர்களுக்கு பதில் வந்த அந்த இரண்டு நபர்கள் யார் என்று கேட்டார். 

            இவர்கள் தான் என்று அனைவரும் இருவரை கை காண்பித்தனர். அவர்கள் பயத்தில் நடுங்கினர். அதற்குள் சுதாரித்த ஆய்வாளர் பயப்படாதீர்கள் நேற்றே சென்றவர்கள் மீண்டும் வந்துவிடுவர் நீங்கள் முன்பிருந்த பணியை போய் தொடருங்கள் என்று கூறினார்.

             அவர்கள் விட்டால் போதும் என்று ஓட்டமும் நடையுமாக ஓடினர். ஆய்வாளர் அவர்கள் இருவரையும் கண்காணிக்க சில காவலர்களுக்கு உத்திரவிட்டார்.

              அதற்குள் இருட்டி விட்டது. அடுத்த சம்பவத்திற்கு நேரம் வந்துவிட்டது மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி கூட்டத்தை கலைத்தார். ஆனால் இன்று தெளிவாக ஒன்றை செய்தார்.

           ஆம்! இது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி என்பதை அறிந்து அதனுடன் பேச முற்பட்டார்.அதற்கு அவர் ஒரு பெரிய பலகையில், நான் உன்னுடன் பேச வேண்டும் என்று மட்டும் பெரிதாக எழுதி தொழிற்சாலையின் நடுவே தொங்கவிட்டார்! பிறகு நிம்மதியாக தூங்கிவிட்டார். மற்ற காவலர்களையும் தூங்க சொல்லிவிட்டார். பேய் நம்மவர்களை ஒன்றும் செய்யாது என்று கூறி.

         அடுத்த நாள் அவர் நினைத்தது நடந்தது. ஆம்! அவர் தொங்கவிட்ட பலகையில் பிணங்களை தோலுரித்து வழக்கம்போல் தொங்கவிட்டு இருந்தது ரத்தம் சொட்ட சொட்ட. இம்முறை மூன்று நபர்கள். ஆனால் ஆய்வாளரோ அதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் தன் கேள்விக்கு விடை தேடினார்.

           அவருக்கான விடை பிணங்களின் முதுகில் சதையை கிழித்து எழுதி இருந்தது.

          " முன்னேறு விடை கிடைக்கும்" என்று.

          சந்தோஷத்தில் ஆய்வாளர் காவல் நிலையத்தை நோக்கி பயணித்தார். அங்கிருந்த அவரின் காவலர்கள் திகிலுடன் பார்த்தனர் அவரை.

          காவல் நிலையத்தில் காணாமல் போனவர்களின் தகவலை சேகரித்துக்கொண்டு தொழிற்சாலை வந்தடைந்தார். தொழிற்சாலையின் இரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆராய்ந்தார். உற்சாகத்தில் துள்ளி குதித்தார்.ஆம்! குழந்தைகள் காணாமல் போன தேதியும் இவர்கள் பணிக்கு வரும் தேதிகளும் முன்பின் இருந்தன.

           ஆம்! அவர் கிராமத்தில் காணாமல் போனவர்களுக்கும் காரணம் இறந்த தொழிற்சாலை காவலர்கள்தான் என்று கண்டுப்பிடித்துவிட்டார். ஆனால் ஏன் எதற்கு காரணம் என்பது புரியாத புதிராகவே இருந்தது.எப்படி கிராமத்தில் இருந்து இங்கே வந்து இருப்பார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


          உடனே மருத்துவ நண்பருக்கு போன் செய்து அந்த குழந்தைகள் நிலை கேட்டறிந்தார். அவரோ நாளை இரவிற்குள் சகஜமாகி விடுவார்கள் என்றார். உடனே அவர் ,"கண்டிப்பாக அப்போதுதான் உண்மை தெரியவரும் " என்றார்.

        அவருக்கே தெரியாமல் அவரின் பின்னால் இரண்டு சிகப்பு கண்கள் சிரித்துக்கொண்டு இருந்தது. சபாஷ்! என்று கூறி.

         குற்றவாளிகளில் 7 பேர் இறந்துவிட்டனர். அப்போது மீதம் 1 என்று தவறாக கூறினார். பிறகு சுதாரித்து இல்லை இல்லை 5நபர்கள். மீதமுள்ளவர்கள் யார் யார்? ஏன் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்?


                - ரத்த வேட்டை தொடரும்


Rate this content
Log in

Similar tamil story from Horror