வேட்டைக்காரன்
வேட்டைக்காரன்
ஜார்ஜ் ஒரு மோசமான ரத்த வெறி பிடித்த வேட்டைக்காரன். அவன் வேட்டையாடும் போது குட்டிகளுக்கு கூட பாவம் பார்ப்பதில்லை, கொடூரமாக தரையில் அடித்து கொலை செய்வான். விலங்குகள் வேட்டையாடும் போது பல நேரங்களில் பாவம் பார்த்து விட்டுவதை நாம் பார்த்து இருக்கிறோம்.ஆனால் ஜார்ஜ் ஒரு மனசாட்சியே இல்லாத மனித உருவத்தில் இருக்கும் அரக்கன்.
பல குற்ற வழக்குகளில் சம்பந்தம் உடையவன். அவை பெரும்பாலும் விலங்குகளை வேட்டையாடி தந்தம், தோல்கள், இன்னும் பல அரிய விலங்குகளை வேட்டையாடியதாகவே இருக்கும்.
அரசாங்கம் பல முறை சல்லடை போட்டாலும் இவன் அகப்படுவதில்லை. அவனால் காட்டில் உள்ள விலங்குகளுக்கும் அரசாங்கத்திற்கும் நிம்மதியே இல்லாமல் போச்சு.
இன்று, காட்டின் ஒரு மூலையில் இரவு வேட்டைக்காக தயாராகி கொண்டு இருந்தான். அப்போது அவனை சுற்றி குளிர் அதிகமாக இருந்தது. இரவு நேரம் என்பதால் அப்படிதான் இருக்கும் என்று விட்டுவிட்டான்.
இன்று ஒரு யானை வேட்டைக்கு போக மும்முரமாக இருந்தான். தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் ஒரு பெரிய பையில் போட்டு தூக்கி மாட்டிக் கொண்டான்.
போகும் போது கால் இடறி கீழே விழுந்தான். இதுப்போல் அவனுக்கு நடந்தது இல்லை. எழுந்து சிறிது யோசித்தவன் மறுபடியும் நடந்தான்.
யானைகள் தடம் தெரிந்தவுடன் தன் வேலைகளை ஆரம்பித்தான்.
அப்போது திடீரென்று அவனை யாரோ முட்டி கீழே தள்ளியது போல தலை குப்புற விழுந்தான். துடிதுடித்து எழுந்து பார்த்தான் இருட்டில் அங்கு யாரும் இல்லை. ஏதாவது விலங்கு தாக்குதோ என்று துப்பாக்கியை தயாராக பிடித்துக்கொண்டு தன்னை கீழே தள்ளிய விலங்கை வெறியோடு தேடினான்.
மீண்டும் ஏதோ முட்டியதை போல குப்புற விழுந்தான். பின்பு சுதாரித்து எழுந்தவன் மிருகத்தை போல கத்தினான்," நீ எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் விடமாட்டேன். உன்னை பிடித்து சித்திரவதை செய்து கொல்வேன்" என்று பல்லை கடித்துக்கொண்டே முனகினான்.
ஆனால் யாரோ அவனை மீண்டும் மீண்டும் தள்ளினார்கள். ஐந்து முறை அவ்வாறே நடந்ததும் மிகுந்த கோபத்துடன் சைலன்சர் பொருத்திய துப்பாக்கியை சரமாரியாக வெடிக்கவிட்டான்.
குண்டுகள் தீர்ந்ததும் மீண்டும் லோட் செய்து ஏதாவது இறந்து கிடக்கிறதா என்று தேடினான். வெகுநேரம் தேடிய பின்னும் ஒன்றும் கிடைக்கவில்லை.
திடீரென்று அவனிடம் இருந்த துப்பாக்கியை யாரோ பிடிங்கிக்கொண்டனர். அவ்வளவுதான், அதுவரை மிருகமோ என்று திமிராய் இருந்தவனுக்கு லேசாய் பயம் தொற்றியது. இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்தான்.
அவன் எடுத்த அதே வேகத்தில் யாரோ அதையும் பிடிங்கினர். அவ்வளவுதான், பாதுகாப்பிற்கு வைத்திருந்த எல்லாம் காணாமல் போய்விட்டதால் அவனை பயம் ஆட்கொண்டது.
இப்போது இரவு குளிர் அவனுக்கே உரைத்தது. அப்போது உணர்ந்தான் இந்த குளிர் வழக்கமானது இல்லை என்று. உடனே அங்கிருந்து ஓட தொடங்கினான்.
இப்போது அவனுக்கு பல விலங்குகளின் அலறல்கள் கேட்டன. கையில் பாதுகாப்பு கருவிகள் இல்லாதததால் வெறி பிடித்தவன் போல ஓடினான்.
தன்னை பின்னாடி யாரோ துரத்துவதை உணர்ந்து வேகமாக ஓடினான். ஆனால் அவனால் யார் துரத்துகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஓடியவன் திடீரென்று ஏதோ ஒன்றின் மேல் மோதி கீழே விழுந்தான். தன் உடலில் தண்ணீர் ஊற்றியதை போல திரவத்தை உணர்ந்தான். அதை எடுத்து முகர்ந்தான். இரத்தவாடை அடித்தது. அவன் இதயம் பலமடங்கு அதிகமாக துடித்தது. உடனே தனக்கு ஏதாவது அடிப்பட்டு உள்ளதா என்று பார்த்தான். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அப்போ அந்த இரத்தம் யாருடையது என்று யோசித்தவாறே தான் எதன் மீது மோதி விழுந்தோம்னு நினைத்தபடியே எழுந்தான்.
எழுந்தவன் தன் முன்னை ரத்த வெள்ளத்தில் கண்கள் இரண்டும் இரத்த சிவப்பாய் மின்னிக்கொண்டு கால் நகங்கள் எல்லாம் பிடுங்கப்பட்டு உடல் எங்கும் அடிப்பட்டு கோர உருவமாய் ஒரு பெண் யானை நின்றிருந்தது. அதன் கண்களில் கோபம் அனலாய் தகித்தது.
அதை பார்த்தவனுக்கு அப்படியே தூக்கிவாரி போட்டது. ஆம்! போன வாரம் கொன்று போட்ட அதே யானை! ஆனால் இன்று தன் முன்னால் எப்படி என்று யோசிச்சுகிட்டு இருக்கும் போதே காடே அதிர அந்த யானை பிளிறியது.
அவ்வளவுதான் பயத்தில் அரண்டு போனான் ஜார்ஜ். வெறும் ரத்த வெறி பிடித்து திரிந்தவன் இன்று பயத்தினால் சிறுநீர் போகும் அளவிற்கு இருந்தது அந்த பிளிறல். காட்டின் பக்கத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், இரவு வேலையில் இருந்த காட்டு அரசாங்க அதிகாரிகளுக்கும் கூட அந்த பிளிறல் கேட்டது. அவர்களோ அது ஜார்ஜின் வேட்டையாகதான் இருக்கும் பாவம் அந்த விலங்கு என்று எண்ணினார்கள். அங்கு போனால் கூட அந்த விலங்கை காப்பாற்ற முடியாதே என்று எண்ணினார்கள்.
அவர்களுக்கு தெரியவில்லை, அங்கு வேட்டைதான் நடக்கிறது. ஆனால் ஜார்ஜின் வேட்டை அல்ல இது இறந்த யானை ஆவியின் பழிவாங்கும் வேட்டை என்று.
சத்தம் வந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தனர் அதிகாரிகள்.
அங்கு பிளிறல் கேட்டு அரண்டவனுக்கு தாமதமாகதான் புரிந்தது அது யானை இல்லை யானையின் ஆவி என்று. அடுத்த நொடி அவன் கண்முன்னே அந்த காட்சி ஓடியது.
அன்று வேட்டைக்கு வந்தவனுக்கு மாட்டியது ஒரு பெண் யானையும் அதன் குட்டியும். பெண் யானையை சரமாரியாக உடம்பெங்கும் கத்தியாலும் துப்பாக்கியாலும் சுட்டவன். குற்றுயிரும் குலை உயிருமாய் இருந்த அவள் கண் முன்னாலேயே அவள் குட்டியை இரும்பு தடியால் அடித்தே கொன்றுவிட்டு பிறகு தாய் யானை கண் முன்னேயே குட்டியை துண்டு துண்டாக வெட்டி வீசினான். தாய் யானை உடலில் கடைசி உயிர் இருக்கும் போதே அதன் கால் நகங்கள் முதல் எல்லாவற்றையும் வெட்டி எடுத்துக்கொண்டான்.
அன்று இறந்த யானை தான் இன்று அருவமாய் வேட்டைககாரனை வேட்டையாட வந்துள்ளது.
காட்சி மறைந்ததும் அவன் ஏதோ பிடியில் இருப்பதை உணர்ந்தான். ஆம் அது யானையின் துதிக்கையில். அவனை பிடித்த யானை அவனின் கால்களை மட்டும் ஓங்கி மரத்தில் அடித்தது ஜார்ஜ் கால்கள் உடைந்து தொங்கியது. அவன் வலியால் காடே கேட்கும்படி அலறினான். அங்கு விரைத்துக்கொண்டு இருந்த அனைவருக்கும் கேட்டது. அடுத்து யானை அவனை கீழே போட்டு அவனின் கைகளை காலால் நசுக்கியது அவனோ அலறியவனாய் மன்றாடினான். ஆனால் யானையோ பழிவாங்குவதிலேயே குறியாக இருந்தது.
இப்போது யானை ஒரு மரக்குச்சியை எடுத்து அவன் கண்களில் சொருகியது. அவ்வளவுதான ஜார்ஜ் கடைசி உயிர் மட்டுமே அவனிடம் ஒட்டியிருந்தது. கடைசியாக தன் குட்டியின் அலறல் கண்முன்னே வர ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி அவன் நெஞ்சில் இறக்கியது. ஜார்ஜ் உயிர் பிரிந்தது. யானையும் மறைந்தது. அதற்குள் அங்கு வந்த அதிகாரிகள் ஜார்ஜ் கோரமாய் இறந்து கிடப்பதை தான் பார்க்க முடிந்தது.
என்ன நடந்தது ஏது நடந்தது என்று தெரியாமல் இருந்தாலும், விலங்குகளுக்கும் தங்களுக்கும் ஒரு தலைவலி தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தனர்.
அடுத்த நாள் காண்டா மிருகம் ஒன்று இறந்து கிடந்தது கொம்பு திருடப்பட்டு. ஒருவேளை இவன் தான் ஜார்ஜை கொன்றுயிருப்பானோ என்று சிந்திக்க தொடங்கியபோதே, அவ்வளவு பெரிய மரத்தை செங்குத்தாக நெஞ்சில் இறக்கியது எப்படி என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
அந்த நாளின் இரவே ஜார்ஜ் அலறியதை போலவே அலறல் கேட்டு சென்று பார்த்தனர் அங்கு கை கால்கள் பிடிங்கி எறியப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவன் இவர்கள் அவனை நெருங்கிய அடுத்த ஏழாவது நொடி உயிர் பிரிந்தது.
அடுத்த ஒருவாரம் விலங்குகள் உறுப்புகளுக்காக கொல்லப்படுவதும் அன்று இரவே கொன்றவர்கள் விலங்கு கொல்லப்பட்ட மாதிரியே இறப்பதும் நடந்தது.
ஒருவாரம் கழித்து உலகெங்கும் இக்காட்டை பற்றி தகவல் சென்றது. அதை தொடர்ந்து காட்டில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
" எச்சரிக்கை!
இக்காட்டில விலங்குகளை
வேட்டையாடுபவர்களை
வேட்டையாடும்
வேட்டைக்காரன்
உள்ளான்.
மீறி வேட்டையாடினால்
வேட்டையாடப்படுவீர்கள்"
அன்றிலிருந்து காட்டு விலங்குகளும், அரசு அதிகாரிகளும் நிம்மதியாய் வாழ்ந்தனர்.