Arul Prakash

Horror Crime Thriller

3  

Arul Prakash

Horror Crime Thriller

பேய் ஆசை

பேய் ஆசை

10 mins
582


ஒரு குடும்பம், அதுல ஒரு அம்மா, அப்பா,ரெண்டு ஆம்பள பசங்க, ஒரு பொம்பள பொண்ணு. ரவி வீட்ல பெரியவன், ரெண்டாவது பொறந்தது பொண்ணு, பேரு தேவி, மூணாவது பையன் பேரு விசு. தேவி லவ் பண்ணி ஓடி போய் கல்யாணம் பண்ணதுல, இவங்க வீட்ல யாரும் பேசுறது இல்ல. சின்னவன் விசு, காதல் தோல்வில தற்கொலை பண்ணி செத்துட்டான். இவங்க மிக பெரிய பணக்கார குடும்பம், பல நாட்டுல வியாபாரம் பண்ணுறாங்க. விசு செத்துட்டதால இந்தியால இருக்க வீட்ட விட்டுட்டு குடும்பத்தோட அமெரிக்கா போய்ட்டாங்க.


ரவிக்கு தேவிகிட்ட இருந்து போன் வருது. போன் எடுத்து பேசுறான்.


ரவி : ஹலோ.


தேவி : நான் தேவி பேசுறன் டா.


ரவி : தெரியுது, சொல்லு என்ன விஷயம்.


தேவி : டேய் எனக்கு கொஞ்சம் பண உதவி வேணும் டா. கஷ்டத்துல இருக்கேன்.


ரவி : எவனோ கூட்டிட்டு, ஓடி போன இல்ல, அப்டியே போய்டு.


தேவி : அம்மா அப்பா தான் என் மேல கோபத்துல இருக்காங்க, நீயும் ஏன் டா இப்படி பேசுற.


ரவி : அப்படித்தான் பேசுவேன், இனி எனக்கு போன் பண்ணாத.


ரவி போன் கட் பண்ணிட்டான்.


ரவியின் மனைவி : உன் தங்கச்சி எதோ கஷ்டம்னு கேட்குறா , நம்ம கிட்ட பணத்துக்கா கஷ்டம், கொஞ்சம் கொடுத்து உதவி பண்ணா என்ன.


ரவி : இப்ப உதவி பண்ணி, கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்குள்ள வந்துடுவா. அப்பறம் சொத்துல பாதி கொடுக்குற மாதிரி ஆகிட போது. விசு போய் சேந்துட்டான்னு நிம்மதியா இருக்கேன். இவ வேற சொத்துக்கு வந்துட போகுறா. முழு சொத்தும் எனக்கே.


ரவியின் மனைவி : பணத்து மேல பேய் ஆசைங்க உங்களுக்கு.


ரவி : அப்படி தான்டி போடி.


----------ரெண்டு நாள் கழிச்சி -----------


இந்தியால இருந்து போன் கால் வருது, ரவி போன் எடுத்து பேசுறான்.


ரவி : ஹலோ, யாரு பேசுறது.


watchmen: சார், நான் இந்தியால இருக்க , உங்க வீட்டு watchmen பேசுறேன் சார்.


ரவி : சொல்லு பா, என்ன விஷயம், சம்பளம் லாம் கரெக்ட்டா வருதா.


watchmen : வருது சார், உங்க வீட்ல ஒரு பிரச்சனை அத சொல்ல தான் கால் பண்ணேன்.


ரவி : சொல்லு என்ன பிரச்சனை.


watchmen: உங்க வீட்ட பாத்துக்க ஒரு வேலைக்கார குடும்பத்தை வீட்ல தங்க வச்சி இருக்கீங்கல


ரவி : ஆமா பா லட்சுமி அம்மா குடும்பம், வீட்ட சுத்தமா வச்சிகிறாங்களா இல்லையா.


watchmen : அதெல்லாம் நல்லா தான் சார் வேல செய்யுறாங்க, லட்சுமி அம்மா பொண்ணுக்கு தான் பேய் பிடிச்சி இருக்கு.


ரவி : இதுக்கு ஏன் யா எனக்கு கால் பண்ணி சொல்ற, நல்ல சாமியாரா கூப்பிட்டு பேய் ஓட்ட சொல்ல வேண்டியது தான.


watchmen : சாமியார் வந்து பேய் ஓட்டுனாங்க, ஆனா பேய் போகல. அந்த பொண்ணு மேல இருக்க பேய் உங்க தம்பி விசுனு சொல்லுது சார்.


ரவி: ஐயோ என்னையா சொல்ற, நான் உடனே கிளம்பி இந்தியா வரேன்.


ரவியின் மனைவி, ரவி போன் பேசறத கவனிக்கிறா.


ரவியின் மனைவி to ரவி : என்னங்க போன்ல பதட்டமா பேசுனீங்க.


ரவி : ஒரு பிரச்சனை, ரெண்டு நாள்ல இந்தியா போறேன்.


ரவியின் மனைவி : என்ன பிரச்சனை


ரவி : போய்ட்டு வந்து சொல்றேன், அம்மா, அப்பாக்கு தெரியாம பாத்துக்கோ. இந்தியால இருக்க வீட்டோட பத்திரத்த என் bagல வச்சிடு.


ரவியின் மனைவி : எதுக்கு அந்த வீட்டு பத்திரம், எதும் சொல்ல மாற்றிங்களே.


ரவி : சொல்றத செய்யுடி, வந்து சொல்றேன் எல்லாத்தயும்.


ரவி அமெரிக்கால இருந்து இந்தியா வந்துடுறான்.


இந்தியால இருக்க அவன் வீட்டுக்குள்ள போய், வீட்டு வேலைக்கார லட்சுமி அம்மாவை விசாரிக்கிறான்.


ரவி to லட்சுமி அம்மா : என்னமா ஆச்சி


லட்சுமி அம்மா : என் பொண்ணு மேல உங்க தம்பி விசு ஆவி இருக்கு பா.


ரவி : எதுனா வேணும்னு சொன்னானா விசு .


லட்சுமி அம்மா : எதுனா கேட்டா தான் பண்ணிடலாமே, என் பொண்ணுக்கு 12வது பரீட்சை இருக்கு, இந்த நேரத்துல இப்படி ஆகிடிச்சே.


ரவி : ஒன்னும் கவலை படாதீங்க, நல்ல சாமியார வச்சி பேய் ஒட்டிடலாம்.


லட்சுமி அம்மா : நன்றி பா.


ரெண்டு மூணு சாமியார வச்சி பேயோட்ட பாத்தா, எதுவும் சரிப்படல. கடைசியா ஒரு பெரிய சாமியாரை கூட்டிட்டு வந்து இருக்கான். கொஞ்சம் நேரம் இந்த சாமியார் பேய் ஓட்டுறாரு.


ரவி to சாமியார் : எதுனா சொன்னானா சாமி, என் தம்பி விசு .


சாமியார் : இல்ல பா. ரொம்ப உக்கிரமா இருக்கான். எனக்கு என்னமோ அவன் சாவுல தான் சந்தேகமா இருக்கு, அவன யாரு கொன்னா


ரவி : அவனை யாரும் கொள்ளல, அவன் தற்கொலை பண்ணிக்கிட்டான்.


சாமியார் : எதோ தப்பா இருக்கே, அவனுக்கு நிறைவேறாத ஆசை எதுனா இருக்கா.


ரவி : அது வந்து.


சாமியார் : அவனை நீ தான் கொன்னியா.


ரவி : ஐயோ சாமி, நான் அவனை கொள்ளல.


சாமியார் : நீ எதையோ என்கிட்ட மறைக்கிற, சொல்லல னா பேய்ய விரட்ட முடியாது.


ரவி : நீங்க யார்கிட்டயும்


சாமியார் : யார் கிட்டயும் சொல்லமாட்டேன் சொல்லு.


ரவி : விசு சாவுறதுக்கு முன்னாடி, அவன் ஒரு வீடியோ எடுத்து, அதுல அவனுக்கு வரவேண்டிய சொத்து எல்லாம் என் தங்கச்சி தேவிக்கு எழுதிடுங்கனு பேசி இருந்தான். நான் சொத்து மேல இருந்த ஆசையில, அந்த விடீயோவை அவன் போன்ல இருந்து,அம்மா அப்பாக்கு தெரியாம delete பண்ணிட்டேன்.


சாமியார் : அப்படி சொல்லு உண்மைய. நான் அந்த பேய் கிட்ட இப்ப பேசி பாக்குறேன்.

---------------------- ரெண்டு நாள் கழிச்சி ----------


சாமியார் to ரவி : ரெண்டு மூணு நாளா அந்த பேய் கிட்டயும் பேச முயற்சி பண்ணிட்டேன், அது பணிய மாட்டுது. ரொம்ப உக்கிரமா இருக்கு.


ரவி: இப்ப என்ன தான் வழி.


சாமியார் : பேசாம உன் தம்பி ஆசைப்படி அவனுக்கு சேர வேண்டிய சொத்து எல்லாம் உன் தங்கச்சிக்கு எழுதிடுங்க.


ரவி : ஒரு 150 கோடி ரூபா சொத்தை தர சொல்றிங்களா அவளுக்கு, என்னால முடியாது, வேற வழி சொல்லுங்க.


சாமியார் : 150 கோடியா, நீ சொன்ன மாதிரி குடுக்க மனசு வராது தான். உன் தம்பி ஆவி இந்த வீட்ல செத்ததுனால இங்கயே சுத்துது, பேசாம இந்த வீட்ட வர விலைக்கு வித்துடு. அப்பறம் அமெரிக்கா போய்டு,அவன் ஆவி தொல்லை இருக்காது 


ரவி : நீங்க சொல்றதும் சரிதான், உடனே வீட்ட வாங்கிக்க யார் வருவா.


சாமியார் : எனக்கு தெரிஞ்ச ஒரு பார்ட்டி இருக்கு, ஆனா விலை கூட குறைய தான் இருக்கும்.


ரவி : விலை கம்மியா இருந்தா பருவா இல்ல, நீங்க அந்த பார்ட்டிய சீக்கிரம் வர சொல்லுங்க.


சாமியார் : நாளைக்கே வர சொல்றேன்.


----------------------அடுத்த நாள் --------------------------


சாமியார், ரகுனு ஒருத்தர வீடு வாங்க கூட்டிட்டு வந்து இருக்காரு.


சாமியார் to ரவி : இவர் பேரு தான் ரகு,வீடு வாங்க வந்து இருக்காரு.


ரவி to ரகு : வாங்க சார், வீட்ட சுத்தி பாருங்க.


வீடு பார்த்த பிறகு.


ரகு : சார் எனக்கு வீடு பிடிச்சி இருக்கு.


ரவி : சந்தோஷம் சார், நீங்க வாங்கதற்கு முன்னாடி, ஒரு உண்மையை சொல்லணும். என் தம்பி இங்க தற்கொலை பண்ணி செத்துட்டான், அத உங்க கிட்ட மறைக்க விரும்பல. அதுவும் இல்லாம அவன் ஆவி வந்துட்டு போகும்.


ரகு : சார் எனக்கு இந்த பேய் பிசாசு மேலலாம் நம்பிக்கை இல்ல. இருந்தாலும் உண்மையை சொன்னதற்கு நன்றி.


ரவி :நன்றிலாம் எதுக்கு சார். எப்ப வீட்ட வாங்கிக்கிறிங்க.


ரகு : மூனு நாள்ல வாங்கிக்கிறேன்.


ரவி : சந்தோசம் சார்.


-----------------ரெண்டு நாள் கழிச்சு --------------


ரகு, ரவிக்கு போன் பன்றாரு


ரகு to ரவி : சார் நான் ரகு பேசுறேன், வீடு வாங்க வந்தேனே.


ரவி : சார் சொல்லுங்க, என்ன நைட் 9 மணிக்கு கால் பண்ணி இருக்கீங்க.


ரகு : சார் புதுசா ஒரு பிரோ வாங்குனோம், எங்க வீட்டு வாசல் சின்னதா இருக்கறுதுனால, பிரோ வீட்டுக்குள்ள போகல, வெளிய தான் வச்சி இருக்கோம், மழை பெய்யுற மாதிரி இருக்கு, இன்னைக்கு ஒரு நாள் உங்க வீட்ல பிரோவ வச்சிக்கலாமா. எப்படியும் ஒருநாள்ல வீட்ட நான் தான வாங்கிக்க போறேன்.


ரவி : சரி சார், வச்சிக்கோங்க. நான் இப்ப ஹோட்டல் ரூம்ல இருக்கேன். watchmanக்கு போன் பண்ணி சொல்லிடுறேன். நீங்க போய் வச்சிக்கோங்க.


ரகு : நன்றி சார்


நைட் ஒரு 11 மணிக்கு, ரவிக்கு ஏதோ சரியா படல, வீடு வாங்கதற்கு முன்னாடி பிரோ வீட்ல வைக்குறது தப்பா இருக்குனு தோணுது. ஹோட்டல் ரூம்ல இருந்து வீட்டுக்கு போறான்.


ரவி to watchmen : என்ன யா பிரோவ தூக்கி உள்ள வச்சிட்டீங்களா.


watchmen : வச்சிட்டோம் சார். என்ன சார், வீட வித்துட்டீங்களா, சொல்லவே இல்ல.


ரவி : இல்ல பா, நாளைக்கு தான் விக்குறோம். இன்னைக்கு அவங்களோட புது பிரோவ வீட்ல வச்சிக்குட்டுமானு கேட்டாங்க. சரினு சொல்லிட்டேன்.


watchmen : புது பிரோவா, சார் பிரோகுள்ள சாமான் இருந்துது சார்.


ரவி : சாமான் இருந்துதா.


watchmen : நானும் தான, ஒரு கை பிடிச்சு பிரோவ தூக்குனேன், எனக்கு தெரியாது.


உடனே வீடு வாங்குறேன் சொன்ன ரகுக்கு கால் பண்ணான் ரவி.


ரவி to ரகு : சார் காலி பிரோ தான வைக்கிறேன் சொன்னிங்க, இப்ப என்ன பிரோல சாமான் இருக்குனு watchmen சொல்ரான்.


ரகு : அது வந்து சார்.


ரவி : என்ன மழுப்புறீங்க, உடனே வீட்டுக்கு கிளம்பிவாங்க.


ரகு : சரி சார்.


உடனே சாமியாருக்கு போன் பன்றான் ரவி.


ரவி to சாமியார் : சார், உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க.


சாமியார் : என்னப்பா திடிர்னு.


ரவி : காலி பிரோ வைக்கிறேன்னு சொல்லிட்டு சாமான செத்து வச்சி இருக்காரு ரகு. எனக்கு என்னம்மோ தப்பா இருக்கு.


சாமியார் : இதோ வரேன் பா


வீட்டுக்கு சாமியார், ரகு வராங்க. மூணு பேரும் பேசிக்கிறாங்க.


ரவி to ரகு : சார் அந்த பிரோவ திறங்க.


ரகு : அது வந்து சார்


ரவி : திறங்க சார் முதல.


ரகு போய் அந்த பிரோவ திறக்குறாரு, திறந்தா பிரோ புல்லா பணம். ரவி ஆச்சரியும் ஆகுறாரு.


ரவி to ரகு : என்ன யா புல்லா பணமா இருக்கு, திருட்டு பயலா நீ.


ரகு : சார் பெரிசு பண்ணாதீங்க சார், இந்த வாரத்துல ஒரு நாள் என் வீட்டுக்கு income tax ரெய்டு வரும் தகவல் வந்தது எனக்கு தெரிஞ்ச officer கிட்ட இருந்து, அதுனால தான் கருப்பு பணத்தை இங்க வச்சேன்.


ரவி : யோவ் ஒழுங்கா, பணத்தை எடுத்துக்குட்டு வெளிய போ. இல்ல போலீஸ கூப்பிடுவேன்.


ரகு : யோவ் நீ என்ன ரொம்ப யோகியமா, உன் தம்பி விடீயோவை உங்க அம்மா அப்பாக்கு தெரியாம டெலீட் பண்ணியே, சொத்துக்காக. உன்னையும் தான் போலீஸ் புடிக்கும்.


பேசிட்டு இருக்கும்போதே திடிர்னு ஒரு அலறல் சத்தம். பாத்தா அந்த லக்ஷ்மி அம்மா பொண்ணு பேய் புடிச்சு கத்திட்டு அந்த பிரோ இருக்குற ரூம்ல வந்துடுது. ரகு ஓடி போய் அந்த பிரோவ பூட்டிடுறான்.


எல்லாரும் என்ன பண்றதுனு தெரியாம நிக்கிறாங்க.


ரவி to சாமியார் : யோவ் வந்தது இருந்து சும்மா நிக்குற, அந்த பேய்ய எதாவது பண்ணு.


சாமியார் ஏதோ மந்திரம் சொல்லிட்டு, அந்த பொண்ணு கிட்ட போறான், அந்த பேய் பலார்னு ஒரு அரை வைக்கிறா. சாமியார் கீழ விழுந்துடிறாரு. எல்லாரும் என்ன பண்றதுனு தெரியாம முழிக்குறாங்க. அந்த பேய் கோபமா, இந்த வீடு யாரு பேர்ல இருக்கோ அவங்கள கொன்னுடுவேன்னு சொல்லிட்டு மயக்கம் போட்டு விழுந்துடுது. சாமியார் பயத்துல ஓடி போய்ட்டாரு. மயக்கம் போட்ட பொண்ண, லட்சமி அம்மா கூட்டிட்டு போயிடுறாங்க.



ரகு to ரவி : யோவ் என்ன யா நிஜமான பேய்ய இப்ப தான் பாக்குறேன். இன்னும் ஒரு மணி நேரத்துல என் பணத்தை எடுத்துட்டு போயிடுறேன். உன் வீடே எனக்கு வேணாம்.


ரகு அவன் ஆளுங்கள கூட்டிட்டு வந்து பிரோவ எடுத்துட்டு போயிடுறான்.ரவி ஹோட்டல் ரூம்க்கு வந்து படுத்துடுறான்.

ரவி, அந்த பேய் யாரு பேர்ல சொத்து இருக்கோ அவங்கள கொன்னுடுவேன் சொன்னது திரும்ப திரும்ப ஞாபக படுத்தி பாக்குறான். காலைல எழுந்த உடனே முதல் வேலையா அந்த வீட்ட அவன் தங்கச்சி தேவி பேர்ல எழுதிடணும்னு முடிவுபன்றான்.



காலைல எழுந்த உடனே, அவன் தங்கச்சி தேவியை பாத்து சொத்தை தேவி பேர்ல எழுதிட்டான்.


தேவி to ரவி : அப்பறம் என்ன சகோதரரே, என்ன திடிர்னு என் மேல பாசம் வந்து சொத்தை எல்லாம் என் பேர்ல எழுதி இருக்க.


ரவி : நீ கஷ்டத்தல இருக்கல, அதுனால தான்.


தேவி : டேய் டுபாக்கூர், நீ தான் அந்த வீடியோவ விசு போன்ல இருந்து delete பண்ணனு தெரியும் எனக்கு.


ரவி அவள ஆச்சரியமா பாக்குறான்.


தேவி : எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா. அந்த வீடியோ என் கிட்ட இருக்கு. அவன் whatapp பண்ணி இருந்தான். அவன் சாவு அப்போ அவன் போன்ல அந்த விடீயோவை காணோம், அப்பவே தெரியும் நீ தான் delete பண்ணி இருப்பேன்.


ரவி : அப்புறம் என்ன அம்மா அப்பாகிட்ட அந்த விடீயோவை காமிச்சு பாதி சொத்தை வாங்கிக்க வேண்டியது தானே.


தேவி : எனக்கு விசு சொத்தை தரணும்னு நினைச்சதே சந்தஷம் தான், ஆனா அம்மா அப்பா அவங்க விருப்பதோடு தந்தாதான் நான் வாங்கிப்பேன். நானா இந்த விடீயோவை காட்ட மாட்டேன்.



ரவி : எப்பா ரொம்ப நல்லவளா இருக்க. சரி நான் கிளம்புறேன்.


விசு அமெரிக்கவுக்கு திரும்ப வந்துடுறான். விசு அவன் பொண்டாட்டி கிட்ட நடந்தது எல்லாம் சொல்லிட்டான்.


ரவியின் மனைவி : இவளோ விஷயம் என் கிட்ட மறச்சிட்டீங்க.


ரவி : அதான் எல்லாம் சொல்லிட்டேனே


ரவியின் மனைவி : இப்ப உங்க அப்பா ஏன் டா வீட்ட எழுதி கொடுத்தன்னு கேட்டா என்ன பண்ணுவீங்க.


ரவி : தங்கச்சி கஷ்டப்படுறா அதான் கொடுத்தேன்னு சொல்லுவேன். இப்ப இல்லநாளும் எப்பயாச்சு இந்த செண்டிமெண்ட் வேல செய்யும். எப்படியும் எல்லா சொத்தும் எனக்கு தான், கொஞ்சம் நல்ல பேரு எடுத்தா மாதிரியும் இருக்கும்ல.



ரவியோட அப்பா கிட்ட ரவி பேசுறான்.


ரவி to ரவி அப்பா : அப்பா,தேவிக்கு நம்ம தமிழ் நாட்டுல இருக்க வீட்ட எழுதி கொடுத்துட்டேன்.


ரவி அப்பா : டேய் முட்டாள், அவ நம்ம வீட்டு மானத்தை வாங்கணவ டா. அவளுக்கு போய் எழுதி வச்சு இருக்க. உன் பேர்ல நான் எழுதி வச்ச ஒரே சொத்து டா, இனிமே உன் பேர்ல எழுதி வைக்க எனக்கு எப்படி டா நம்பிக்கை வரும்.


ரவி : இன்னைக்கு இப்படி சொல்லுவீங்க, ஒரு நாள், பொண்ணு கஷ்ட்ட படும்போது எதும் செய்ய முடியலன்னு வருத்த படுவீங்க.


ரவி அப்பா : வருத்த படுவாங்க போடா. நீ பண்ணத நினைச்சா கோபமா வருது.


கொஞ்சம் நேரம் கழிச்சு ரவி அவன் மனைவியோட பேசுறான்.


ரவியின் மனைவி to ரவி : என்னங்க உங்க அப்பா, உங்க தங்கச்சி மேல இவளோ கோபமா இருக்காரு.


ரவி : கோபமா இருக்கறது தாண்டி நல்லது. அப்போ தான் முழு சொத்தும் நமக்கே வரும்.


ரவியின் மனைவி : சொத்து பத்தி பேசுனா தாங்க உங்க முகுத்துல ஒரு பிரகாசமே வருது, என்ன முதல் முதல்ல பொண்ணு பாக்க வந்த போது கூட, உங்க முகம் இவளோ சந்தோஷம் ஆகல. மாமனுக்கு சொத்து மேல அவளோ வெறி.


ரவி : அட போடி (சிரித்த படி சொன்னான் ).


ரவியின் அப்பாவை பார்க்க, அவர் நண்பர் வாசு வந்தார். அவரும் ஒரு தமிழர். பல வருட நண்பர்கள், நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறார்கள்.


ரவியின் அப்பா to வாசு : வாடா எவளோ நாள் ஆச்சு நம்ம பார்த்து.


வாசு : ஆமா டா.


ரவியின் அப்பா : நீ என்ன டா இன்னும் சின்ன பையன் மாதிரி டிரஸ் பண்ணிக்குற.


வாசு : நான் சின்ன பையன் தான டா, உன்னமாதிரி வயசானவனா.


ரவியின் அப்பா : சரி பா நீ சின்ன பையனாவே இரு, அந்த தலைக்கு மேல இருக்க wig ah மட்டும் கழிட்டி வச்சுடு.


வாசு : என்ன டா இன்னும் அத பத்தி சொல்லலையேனு பாத்தேன்.


ரெண்டு பேரும் அவங்களோட பழைய கதையை பத்தி பேசி முடிக்கிறாங்க.


வாசு : அப்பறம் டேய் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.


ரவியின் அப்பா : சொல்லு டா.


வாசு : உன் பொண்ண, தமிழ் நாட்டுல பாத்தேன், ரொம்ப கஷ்டத்துல இருக்கா போல, பாக்கவே கஷ்டமா இருந்தது.


ரவியின் அப்பா : கஷ்ட படட்டும்.


வாசு : என்ன டா பேசுற. லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டா அவ உன் பொண்ணு இல்லையா. டேய் நமக்கு பிறக்குற குழந்தைங்க, நம்ம மூலமா இந்த பூமிக்கு வந்த ஒரு உயிர்,அவ்ளோதான். அவங்க வாழ்க்கை மேல நமக்கு அதிகாரம் இல்ல, அவங்க யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கலாம். டேய் அவ பணக்கார வீட்டு பொண்ணா வளர்ந்தவ டா அவ கஷ்ட படறது பாக்க நல்லா இல்ல. அவளுக்கு பண்ண வேண்டிய கடமையை பண்ணிடு.சரி நான் கிளம்புறேன். நேரம் ஆயிடுச்சு.


-----------ரெண்டு நாள் கழிச்சு ----------


ரவி அப்பா to ரவி : டேய் நீ பண்ணது தான் சரி, தேவிக்கு வீடு எழுதி கொடுத்தது.


ரவி : நான் அப்பவே சொன்னேன்ல


ரவி அப்பா : இன்னொரு ஒரு குட் நியூஸ், உன் தங்கச்சி மேல பாதி சொத்து, உன் மேல பாதி சொத்து எழுதலாம்னு இருக்கேன்.


ரவி : எதுக்கு பா பாதி சொத்து, அது தான் வீட்ட எழுதி வச்சிட்டோமே.


ரவி அப்பா : என்ன டா இப்படி சொல்ற, நீ சந்தோஷ படுவன்னு பாத்தேன்.


ரவி : சந்தோஷம் பா, ரொம்ப ரொம்ப சந்தோஷம்.


ரவி அப்பா : தேவியும் அவ புருஷனும் இன்னும் கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கு வருவாங்க, சொத்தை எழுதி கொடுத்துடலாம்.


ரவி யார்கிட்டயும் பேசாம பாத் ரூம்ல போய் அழுதுட்டு வரான். வெளிய வந்து பாத்தா, தேவி வந்து இருக்கா.


ரவியின் அம்மா to தேவி : எங்கள மன்னிச்சுடுமா நாங்க உன்ன கஷ்டப்படுத்திட்டோம்.


தேவி : பருவா இல்ல விடுமா. நீங்க கூப்டதே சந்தோஷம்.


ரவி அப்பா to தேவி : என்னையும் மன்னிச்சுடுமா.


தேவி : அட என்ன பா நீங்களும் மன்னிப்பு எல்லாம் கேட்டுக்குட்டு.


பாதி சொத்தை தேவி பேர்ல எழுதி தந்துடுறாங்க. மீதி சொத்தை ரவி பேர்ல எழுதலாம்னு போகும் போது


தேவி to ரவி அப்பா : அப்பா இருங்க, என் மேல பாதி சொத்து, அவன் மேல பாதி சொத்து எழுதுனீங்கனா,உங்களுக்கு என்ன இருக்கும், என் பேரு இருக்கறதுல பாதி சொத்தை உங்களுக்கு பேர்ல எழுதிக்கோங்க.


ரவி அப்பா : எங்களுக்கு எதுக்கு பா சொத்து, அதான் ரவி இங்க எங்கள பாத்துக்க போறான்.


தேவி : உங்க பேர பசங்களக்கு ஏதாச்சும் கொடுக்கணும்னா, உங்க கிட்ட எதாவது இருக்கணும்.


ரவி அப்பா : சரி அப்படினா ரவிக்கு கொடுக்குற பாதி சொத்துல இருந்து பாதி எங்க பேர்ல எழுதிக்குறேன். எங்களுக்கு அப்பறம் அவனுக்கு தானே.


ரவி திரும்பவும் பாத் ரூம் போய்ட்டு அழுதுட்டு வரான்.


நைட் ஆகிடிச்சி, எல்லாரும் போய் படுத்துட்டாங்க. தேவியும், ரவியும் மட்டும் பேசிக்கிறாங்க.


ரவி to தேவி : நினைச்ச மாதிரி பாதி சொத்தை வாங்கிட்ட, எனக்கு எதோ கால் வாசி சொத்து கிடைச்சு இருக்கு.


தேவி : நீ தான், விசுவோட வீடியோவ delete பண்ணணு சொல்லி இருந்தேன், அந்த கால் வாசி சொத்து கூட கிடைச்சி இருக்காது.


ரவி : சரி, தமிழ் நாட்டுல இருக்குற வீட்ட வித்து காசு ஆக்கிட்டியா இல்ல இன்னும் இருக்கா.


தேவி : அது விசு வாழ்ந்த வீடு விக்கமாட்டேன். ஒரு காமெடி தெரியுமா, அங்க விசு ஆவி இருக்குனு தானே என் பேர்ல வீட எழுதி வச்ச, லட்சுமி அம்மா பொண்ணு பரீட்சை எழுத புடிக்காம தன் மேல விசு ஆவி இருக்குனு பொய் சொல்லி இருக்கு.


ரவி : விசு பேய்யா வராமலயே, அவன் நினைச்சத செஞ்சிட்டான்.


தேவி : பேய் ஆசை நடந்துடும்னு சொல்லுவாங்க, நடந்துடுச்சு.


------------------------------The End---------------------
























Rate this content
Log in

Similar tamil story from Horror