முண்டக்கை
முண்டக்கை
வயனாட்டின் முண்டக்கை பகுதியில் நிவாரண பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தது.
ராணுவம்,பேரிடர் நிவாரணம் ,பொதுமக்கள் என்று கிட்டத்தட்ட ஒரு வாரம் தேடாத இடங்கள் கிடையாது.
யார் இருக்கிறார்கள்,யாரை காணவில்லை என்று
தகவல் சொல்ல கூட சரியான ஆட்கள் இல்லை.
மீறி விவரம் கேட்க,பாதிக்கப்பட்டு உயிருடன் முகாமில்,மருத்துவமனையில் தங்கி இருந்தவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை.
மீட்பு பணிகளை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று அதிகாரிகள் ஆலோசித்து கொண்டு இருக்கும் போது,அதில் ஒருவர் ,சார் நாம் நிற்கும் இந்த இடத்தை சோதனை செய்யவே இல்லை.
இங்கு தான் ஒவ்வொரு நாளும் நடத்தும் பணிகளை பற்றி விவாதித்து முடிவு எடுக்கிறோம்.
இங்கு தான் சேறு சகதி எதுவும் இல்லை.ஆனாலும் எல்லா இடங்களையும் சல்லடை போட்டு தோண்டி தேடி விட்டோம்.இந்த இடத்தை தவிர.பாருங்கள் இங்கு கூட ஒரு அடி அகலதிற்கு நிலம் பிளவு பட்டு இருக்கிறது.
இதை மட்டும் தோண்டி பார்த்து விட்டு மீட்பு பணியை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று சொல்ல,மற்ற அதிகாரிகள் அனைவருக்கும் அது சுருக்கென்று பட்டது.எப்படி இதை மறந்தோம்.
அந்த இடத்தில் இருந்த சில சாதனங்கள்,உபகரணங்களை மாற்றி வேறு ஒரு இடத்தில் வைத்து விட்டு,சுமார் இருபதுக்கு பத்து என்கிற கணக்கில் இருந்த இருநூறு சதுர அடி
இடத்தை தோண்ட ஆரம்பித்தார்கள்.
சுமார் பத்து அடி தோண்ட,யாரோ மூச்சு விடும் சத்தமும்,முனகல் சத்தமும் கேட்டது.கூடவே ஒரு நாயின் குறைக்கும் சத்தமும் மிகவும் மெலிதாக
கேட்க,அதிக கவனத்துடன்,ஆட்கள் மூலம் மண்ணையும் கற்களையும் அகற்ற,குவியலுக்கு அடியில் பத்து வயது பையனும் அவனுடைய வளர்ப்பு நாயும் இருப்பது தெரிந்தது.
நாயை கட்டிபிடித்து,படுத்த நிலையில் இருந்த இருவரையும் மீட்க,முதலில் வளர்ப்பு நாய் வெளியில் வர,அது வாலை ஆட்டிக்கொண்டு
பலமாக குறைக்க தொடங்கியது.தன்னுடன் இருந்த அந்த பையன் புதைந்து இருக்கிறான் என்பதை குரைத்து அங்குள்ள பணியாளர்களுக்கு
இருந்த ஆபத்தை உணர்த்தியது.பிறகு ஒரு மணி நேரத்தில் அந்த பையனும் மீட்க பட்டான்.
அவனை கண்ட நாய் சுருண்டு மயக்கமாக படுத்து விட்டது.உடனே தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்ப,சில மணி நேரங்கள் கழித்து,அந்த பையனும்,நாயும்
நினைவு திரும்பி பையன் மெதுவாக பேச தொடங்கி விட்டான் என்று அதிகாரிகளுக்கு தகவல் வர,அந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்று சொன்ன,அந்த உதவியாளரை எல்லோரும் உயர தூக்கி தங்கள் மகிழ்ச்சியை
பகிர்ந்து கொண்டனர்.
மீண்டவர் நலமுடன் வாழ,மாண்டு போனவர்கள்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
