திருதிரு
திருதிரு
தத்தி தத்தி நடந்து நடைக்கு வந்து பார்க்க அம்மாவை காணலை....
என்ன பண்ண எனக்கோ பசி....
மெல்ல நடந்து அம்மாவை தேடி சமையலறை செல்ல அங்கும் அம்மா இல்லை....
மெல்ல அங்கிருந்த பானையை கவிழ்த்து போட்டு அதன் மீதேறி மேடையை பார்க்க...
அங்கு அம்மா எனக்காக சாப்பாடு தயாராக கிண்ணத்தில் வைத்திருந்தார்....
எனக்கோ பசி என்ன செய்ய எட்டி எட்டி எடுத்தேன் எடுக்கையில் கிண்ணம் கீழே சாய்ந்தது பானை மீதிருந்தே அதை எடுத்து சாப்பிட என் வாயில் கொஞ்சம்.,... என் மேனியில் கொஞ்சம்... அம்மாவின் சமையலறை கொஞ்சம்னு சாப்பிட்டு முடிக்க
அம்மாவும் வந்துட்டாங்க.....
இப்ப என்ன செய்ய......(திருதிருவென விழிக்கும் குழந்தை)