Jaga Maha

Comedy

3  

Jaga Maha

Comedy

பயமா எனக்கா

பயமா எனக்கா

2 mins
181


இப்பவே கண்ணகட்டுதே ம்ம்.. இம்மாம் பெரிய வீட்ல தனியா பகலில் இருந்துட்டோம்,நைட் எப்படி இருக்குறது தனியே புலம்பிக் கொண்டிருந்தாள் மகி..

ம்ம் எல்லா லைட்டையும் போட்டே வச்சிருப்போம் ஹ்ம்.. சும்மா ஒரு பேச்சிக்கு

தனியாயிருத்துப்பேன்னு சொன்னா இப்படி தனியா விட்டுட்டு போய்ட்டாங்க ஹ்ம்..


யாருக்காவது ஃபோன் பண்ணி பேசிட்டிருந்தா தனியா இருக்றமாதிரி தெரியாதில்லை ம்ம்... நல்ல ஐடியா ம்ம் முதல் ல யாருக்கு ஃபோன் பண்ணலாம்..

நம்ம அக்கா இருக்காங்க அவங்கள்ட்ட கொஞ்சம் மொக்க போடுவோம் டயல் செய்றா..


நீங்கள் டயல் செய்த எண் நாட் ரீச்சபில் ஆர் ஸ்விட்ச் ஆஃப் என்று வர இது வேறயா ?

இரண்டு மூன்று முறை டயல் செய்ய திரும்பவும் அதே வாய்ஸ் ரெக்கார்ட் வர சரி அடுத்து யாருக்கு பண்ணலாம் என்று லிஸ்ட்டில் தேடிகொண்டிருக்க உள்ளே சமையலறையில் பாத்திரம் கீழே விழுந்து உருளும் சத்தம் வர நெஞ்சு தட தடக்க உள்ளே சென்று பார்க்க அங்கு யாருமே இல்லை பாத்திரம் மட்டும் உருண்டு சுழன்று கொண்டிருந்தது..


சுற்றி பார்வையை செலுத்த அங்கு அறையின் ஜன்னல் திறந்திருக்க அதை மூடி கொக்கி மாட்டிவிட்டு மீண்டும் ஹாலிற்கு ஃபோனில் ஏதோ ஒரு நம்பரை டயல் செய்து வர கால் அட்டர்ன் செய்யும் நேரத்தில் சுவிட்ச் ஆஃப் ஆனது ச்சே சார்ஜ் இல்லையா சரி போடுவோம் என்று ஃபோனை சார்ஜில் போட்டு டீவியை ஆன் பண்ண ..

நம்ம தைரியத்திற்கு சவால் விடும் வகையில் பழைய பேய் படமொன்று ஓடிக்கொண்டிருந்தது..

ஆஹா இன்றைக்கு ஏனிந்த ஆனந்த இன்பத்தில் ஆடுது என் மனமோ என்னடி உனக்கு வந்த சோதனை மஹி...


சேனலை மாற்ற சொல்லி வைத்து எல்லா சேனலிலும் ஒரே த்ரில்லர் ஹாரர் படமாகவே வர சரி பாட்டு எதாவது வைப்போம் என்று சேனலை மாற்ற அங்கும் அங்கும் அவளை பயமுறுத்தும் படி பாடிக்கொண்டிருந்தது..

நானே வருவேன் இங்கும் அங்கும் என்று எதுக்கு வம்பு டிவி யே வேணாம் னு அதை அனைத்து விட்டு தனது மொபைலை எடுத்துக்கொண்டு படுக்கையறை சென்று ஃபேன் சுவிட்ச் ஆன் பண்ண அது இரவின் நிசப்தத்தில் புதிதாக ஒரு ஒலி எழுப்பியது க்ரீச் க்ரீச்சென்று மிரட்சியுடனே படுக்க ..


திடீரென்று அவளது அறைக்குப்பக்கத்தில் தெரு நாய் ஒன்று ஊஊஊ வென்று ஊலையிட அரண்டு மிரண்டு போனால் அடடா என்ன ஒரு நீண்ட இரவு எப்படா விடியும் என்று தனக்குள்ளே புலம்ப அந்த நேரம் பார்த்து அவளது மொபைலும் ஒலியெழுப்பியது..


அந்த சத்தத்தில் மிரண்டு அதை எடுத்து பார்க்க அவள் தோழி வனிதா அழைத்திருந்தாள் அடி பக்கி எப்ப ஃபோன் பண்ணா எப்ப திருப்பி கூப்டுறாப்பாரு என்று முனகிகொண்டே ஃபோனை எடுக்க ஏன்டி இவ்ளோ நேரம் என கேட்டு அவளை தூங்க விடாது பேசிக்கொண்டிருக்க இவள் பேசுவதை அவள் கேட்கிறாளா இல்லையா என்பதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தாள்..


அவள் ஃபோனை காதில் வைத்து தூங்கி கொண்டிருக்க வெகு நேரம் பேசியவள் இவளும் தூங்கி போனாள்...

திடீரென அலாரம் அடிக்க எழுந்து அதை நிறுத்தி மணியை பார்க்க அதில் ஆறடிக்க மகி தனது மொபைலை பார்க்க அது இரவெல்லாம் தனது பணியை செய்து முடித்து அணைந்து போயிருந்தது அதை எடுத்து சார்ஜரில் போட்டுவிட்டு வெளியே வந்து கதவை திறந்து வாசலை பெருக்கி கோலமிட்டு வர அவளது அம்மா ஃபோன் பண்ண..


எடுத்து பேசியவள் பயமா எனக்கா அதெல்லாம் எங்க பரம்பரைக்கே கிடையாதே என்று கெத்தா அவர்களிடம் சொல்லி ஃபோனை வைக்க அந்த நேரம்

ஒரு பூனை ஒன்று ம்மியாவ் என்று சீறிக்கொண்டோட பயம் அவளை பார்த்து பல்இளித்தது...



Rate this content
Log in

Similar tamil story from Comedy