மனிதி
மனிதி
ஓர் பள்ளி வாயிலின் நடைபாதையில் ஓர்
வயது முதிர்ந்த அம்மா இரு தினங்களாக
படுத்திருந்தார்.
பார்க்கவே பாவமாக நன்கு வாழ்ந்து
அனுபவித்தவர் போன்றிருந்தார்.
யாரிடமும் உதவி கேட்க தயங்கி பசியுடன்
பசி மயக்கத்துடனும்,
இரண்டு மூன்று தினங்களாக இருந்தார்.
அங்கு வரும் பெற்றோரும் பிள்ளைகளும்
அவரை பார்த்து கொண்டு சென்றனர்.
அவரை பார்த்து அந்த பள்ளியில் படிக்கும்
சிறுமி அவரிடம் வந்து அவரைப்பற்றி
விசாரிக்க அவர் பிள்ளைகளால்
கைவிடப்பட்டது தெரிந்தது.
பிறகு அந்த சிறுமி தன் பெற்றோர்
உதவியுடன் அவரை ஆதரவற்றோர்
இல்லத்தில் சேர்த்து வாரம் ஒருமுறை
அங்கே சென்று அவருட'னும் அங்கிருந்த
மற்றவருடனும் சிறிது நேரம் செலவழித்து
சென்றாள்.
அந்த பாட்டி அவளை அனைத்து முத்தமிட்டு
புன்னகைக்க அவளை பார்த்து சிரித்தாள்
அந்த சின்னஞ்சிறு மனிதி.