கண்ணும் கண்ணும் பார்க்கையில் அத்தியாயம் ஒன்று
கண்ணும் கண்ணும் பார்க்கையில் அத்தியாயம் ஒன்று
இக்கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.
இந்த வாழ்கை ரொம்ப விசித்தரமானது.
ஒரே மாதிரி மன எண்ணம் உள்ளவங்களை சேர்க்காமா சம்பந்தமே இல்லாம மனசு ஒத்தே போகாத ரெண்டு பேரை தேடி புடுச்சு சேர்த்து வைக்கும்.
திரு தன்னோட சொந்த ஊருக்கு திரும்பி பஸ்ஸில் வந்து கொண்டிருந்தான்.
அவனுக்கு தூக்கம் வரவில்லை.
பெங்களூரில் கிளம்பிய வண்டி இன்னும் ஓசூர் கூட வரவில்லை.
தன்னுடைய மொபைலையும் ஹெட் போனையும் எடுத்து பாட்டு கேட்க ஆரம்பித்தான்.
அவனுக்கு அருகில் அவசர அவசரமாக பஸ்ஸில் ஏறிய ஆசாமி ஒருவர் தொப்பென்று சீட்டில் அமர்ந்தார்.
ஏம்பா தம்பி பஸ் திருச்சி போகுமா என கேட்டார் திரு விடம்.
திரு ஆமாங்க ஐயா என சொல்லி மொபைலை நொண்ட ஆரம்பித்தான்.
இளையராஜா பாடல் சுந்தரி கண்ணால் ஒரு செய்தி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜன்மமே கொண்டேன் அதற்காக
நான் உன்னை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்.
எஸ் பி பாலசுப்பிரமணியம் தேன் குரல் அவனையும் பாட வைத்தது.
பெங்களூரில் தான் பார்த்த பெண்ணை பற்றி நினைக்க வைத்தது.
மஞ்சள் நிற சுடிதாரில் கூந்தலை கொண்டை போட்டு புளு கலர் ஷால் போட்டு அவனை கடந்து சென்றாள்.
அவள் கையில் இருந்து கீழே விழுந்த பணத்தை தான் எடுத்ததையும் பின்பு அந்த பெண்ணை அழைத்து அதை கொடுத்த போது நன்றிகள் சார் என் அவள் சொன்னதையும் எண்ணி மகிழ்ந்து கொண்டு இருக்க
அந்த ஆசாமி அவனை உழுக்கி தம்பி ஜன்னலை கொஞ்சம் சாத்து பா என்றார்.
இந்த ஆளை அப்படியே கொட்ட வேண்டும் என சொல்லி மனதில் நினைத்து கொண்டு ஜன்னலை சாத்தினான் திரு.
இன்னும் திருச்சி போற வரைக்கும் பொறுமைக்கான சோதனை என் சொல்லி கண்களை மூடி கொண்டு அடுத்த பாடலை போட்டான்.
சத்தியமா நான் சொல்லுறேனே
உன் பார்வை ஆளை தூக்குதடி
என முகின் ராவின் பாடல் ஒலிக்க
இனி அந்த பெண்ணை பார்ப்பேனோ என சொல்லி கண்ணை மூடி தூங்க
கண்டக்டர் விசில் அடித்து பஸ்சை ஒரு ஹோட்டல் முன் அந்த விடியற்காலை நிறுத்தி இறங்கி டீ குடிக்கிறவங்க,டாய்லட் போறவங்களா போயிட்டு வாங்க என கூறினார்.
அப்ப ஆசாமி என்னை தூங்க விடலை இப்ப கண்டக்டர் என சொல்லி கொண்டை பஸ்ஸை விட்டு இறங்கினான் திரு.
கண்ணும் கண்ணும் பார்க்கையில் அத்தியாயம் 2 என தொடரும்.