தியாகம் செய்யப்பட்ட ஆசைகள்
தியாகம் செய்யப்பட்ட ஆசைகள்
வெள்ளிக்கிழமை இரவு,
பகலவன் தனது தங்கும் இடத்தில் சாப்பிட்டு விட்டு நேரத்தை பார்த்தான்.
மணி இரவு 9:15.
பகலவன் தனது அறைக்கு சென்று பைகளை எடுத்து கொண்டு சொந்த ஊர் செல்ல ஆயுத்தமானான்.
கிளம்பும் முன் பையை திறந்து தன் அப்பா,அம்மாவுக்கு அவன் வாங்கிய பொருட்களை சரியாக எடுத்து வைத்து கொண்டதை உறுதி செய்து கொண்டான்.
பகலவன் தன் ஆன்லைன் பஸ் டிக்கெட்டை போனில் ஒருமுறை திறந்து பஸ் கிளம்பும் நேரம் 11:15 இரவு என மீண்டும் உறுதி செய்துகொண்டு ரூம் பூட்டி விட்டு பைகளை எடுத்து கொண்டு கீழே வந்தான்.
பைகளை கீழே வைத்து விட்டு மீண்டும் ரூம் சரியாக பூட்டப்பட்டுள்ளதா? மெயின் ஆஃப் செய்யப்பட்டதா? என ரூம் வரைக்கும் சென்று பார்த்து விட்டு பைகளை எடுத்து கொண்டு பஸ் ஸ்டாண்ட் புறப்பட்டான்.
பஸ்ஸில் பகலவன் நிற்க மட்டுமே இடம் இருந்தது,கூட்டம் அலைமோதியது அந்த பேருந்தில்.
பஸ்ஸில் வெளியே பார்த்த வண்ணம் சிறிது நேரம்,பஸ்ஸில் உள்ளோரை பார்த்த வண்ணம் சிறிது நேரம் என நிற்க முடியாமல் நின்ற பகலவன் ஆட்கள் இறங்க இறங்க சிறிது கால்கள் நீட்டி, கைகள் உதறி நின்றான்.
பர்ஸ், போன் பாக்கெட்டில் உள்ளதா? என அவ்வப்போது யோசித்து கொண்டே வந்த அவன் அதை சற்று நேரம் செய்யாமல் நிம்மதியாக வந்தான்.
பஸ் ஸ்டாண்ட் வந்து வீட்டிற்கு போன் செய்து பஸ் ஸ்டாண்ட் வந்து விட்டேன்,காலை ஊரில் இருப்பேன் என கூறி விட்டு பஸ் தேடி பிடித்து டிக்கெட் காட்டி,நடத்துனர் அவன் பெயரை லிஸ்டில் டிக் அடித்த பின் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான்.
பஸ் கிளம்பிய நேரத்தில் அமர்ந்து உறங்கிய பகலவன் காலை 4:00 மணிக்கு முழித்தான்.
பஸ் அவன் முழித்து 10 நிமிடங்கள் கழித்து டீ குடிக்க நிற்க கீழே தன் தண்ணீர் பாட்டிலுடன் இறங்கி வாய் கொப்பளித்து விட்டு டீ வாங்கி குடித்தான்.
அந்த டீயை குடித்து கொண்டிருக்கும் போதே வீட்டிற்கு சென்று அம்மா போடும் டீ குடித்து,இத்தனை நாள் சாப்பிட்ட மோசமான சாப்பாடுகளை மறக்கடிக்கும் அம்மா பாசத்துடன் செய்து கொடுக்கும் சாப்பாடுகளை சாப்பிட போகிறோம் என நினைத்தான்.
பஸ் அவன் சொந்த ஊரான திருச்சி வந்த உடன் உற்சாகத்துடன் இறங்கி வீடு இருக்கும் இடத்திற்கு பஸ் ஏறினான்.
வீட்டிற்கு சென்ற பகலவன் வீட்டு பெல்லை அடித்த உடன் அவன் அம்மா வந்து பைகளை வாங்கி கொண்டு உள்ளே சென்றார்.
அவன் அப்பா டிவி ரிமோட்டை கையில் வைத்து கொண்டே “வாப்பா” என்றார்.
போய் குளிச்சிட்டு வா என அவன் அம்மா துண்டு,டிரஸ்,சோப்பு எடுத்து கொடுக்க பகலவன் குளித்து விட்டு வந்தான்.
குளித்து முடித்து வந்த உடன் அம்மா,அப்பாவுடன் சேர்ந்து பகலவன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடித்து விட்டு தனது பையில் இருந்து அப்பாவுக்கு வாக்கிங் செருப்பு மற்றும் அவன் அம்மாவுக்கு கதை புத்தகங்கள் என தான் வாங்கியதை எடுத்து இருவரின் கையிலும் கொடுத்தான்.
சாயங்காலம் என் கூட வெளியே வாங்க என பகலவன் கூறி இருவரையும் மாலை முதலில் கோயிலிற்கு அழைத்து சென்று பின் ஒரு துணி கடைக்கு அழைத்து சென்று துணிகள் எடுத்த பின் ஹோட்டல் அழைத்து சென்று மூவரும் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர்.
அம்மா அவனிடம் டேய் எதுக்கு இப்படி எவ்வளவு செலவு பண்ற? என கேட்க அவன் அப்பா உடனே டேய் இப்போ இதெல்லாம் வாங்கிய ஆகனுமா எங்களுக்கு? என கேட்க பகலவன் சிரித்து கொண்டே “எனக்காக நீங்கள் எவ்வளவோ உங்கள் ஆசைகளை தியாகம் பண்ணி இருக்கீங்க, சின்ன சின்ன ஆசையில் இருந்து,உங்களுக்கு பிடிச்ச விஷயம் வரைக்கும்,அதெல்லாம் நீங்க எனக்கு செஞ்சீங்கல, அதே மாதிரி இப்ப நீங்க ஆசைப்பட்டதை எல்லாம் நான் உங்களுக்கு செய்ய கூடாதா? நான் செய்வேன்,நீங்கள் அப்போ தியாகம் பண்ணறப்ப நான் எதாவது சொன்னேனா? இப்ப நீங்களும் இந்த விஷயத்துல என்னை எதுவும் சொல்ல கூடாது” என பகலவன் கூறினான்.
அவனது பெற்றோர் அவனை பெருமையுடனும்,கண்களில் நீர் பொங்க பார்த்தனர்.
அடுத்த நாள்,வீட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பிய பகலவன் “முன்னெல்லாம் உங்க ரெண்டு பேரையும் விட்டு பள்ளி,கல்லூரி போறப்ப பயம் இல்லை,ஆனால் இப்ப எதோ ஒரு பயம் நீங்கள் என் கூட இருக்க போறது கொஞ்ச காலம்,உங்கள் கிட்ட இருந்து எப்பவும் போன் வராத நேரத்துல ஒரு போன் வந்தா பயமா இருக்கு.
ஆனால் நிச்சயம் நான் உங்களை என்னால் முடிஞ்ச அளவுக்கு, இல்லை இல்லை,எப்படியாச்சும் சந்தோஷமா பார்த்துப்பேன்” என நினைத்து கொண்டே தான் சென்னை பஸ் ஏறிய விஷயத்தை வீட்டிற்கு போன் செய்து அம்மாவுக்கு கூறினான்.
ஊருக்கு போயிட்டு போன் பண்றேன் அம்மா,அப்பாகிட்ட சொல்லிருங்க என சொல்லி விட்டு பகலவன் போனை வைத்தான்.