கண்ணும் கண்ணும் பார்க்கையில் அ
கண்ணும் கண்ணும் பார்க்கையில் அ
இக்கதையை படிக்கும் முன் கண்ணும் கண்ணும் பார்க்கையில் அத்தியாயம் 1 படிக்கவும்.
இக்கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவர் அல்ல.
திரு பஸ்ஸில் இருந்து இறங்கி ஹோட்டலில் உள்ள டாய்லெட்டுக்கு சென்றான்.
கழிவறையை பயன்படுத்தும் மக்கள் அதை சுத்தமாக வைக்க வேண்டும்.
தண்ணீர் உற்றாமல் கழிவு அங்கேயே இருந்து நாற்றம் அடிக்க திரு மூக்கை போத்தி கொண்டு தண்ணீரை பிடித்து ஊற்றி விட்டு கழிவறையை பயன்படுத்தினான்.
பிறகு வெளியே ஹோட்டலுக்கு வந்து டீ வாங்கிவிட்டு மொபைலில் வந்த அழைப்புகளை எடுத்து பார்த்தான்.
பிறகு பஸ் ஏறி தன் இடத்தில் அமர அங்கு இருந்த ஆசாமி டுர் என காற்றை வெளியிட்டார்.
திரு முகம் சுழிக்க என சொல்ல அந்த ஆசாமி திருவை கூப்பிட்டு தம்பி என் உங்களுக்கு எல்லாம் காற்றே வெளியே போகாதோ என கேட்க திரு தலை குனிந்து மொபைலை கொண்ட ஆரம்பித்தான்.
தனது தோழி கயல்விழிக்கு போன் போட்டு பேச ஆரம்பித்தான்.
என்ன கல்யாண பொண்ணு, கல்யாண வேலை எப்படி போகுதுனு என திரு கேட்க நல்லவனே நிச்சயதார்த்திற்கும் வரல கல்யாணத்துக்காவது வா என சொல்ல,மாப்பிள்ளை என்ன பண்றார் என திரு கேட்க கயல்விழி நல்ல மனுசன் நல்லா பேசுறாரு என சொல்ல திரு ஹூம் ஜம்மாய்ங்க மேடம் என சொல்லி அழைப்பை கட் செய்கிறான்.
தான் பெங்களுரில் கண்ட பெண்ணை பற்றிய யோசித்து தூங்குகிறான் திரு.
திருச்சியை வந்து அடைந்தவுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு செல்கிறான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தன் நண்பர்களுக்கு போன் செய்து ஊருக்கு வந்துள்ளதாகவும் வீட்டுக்கு வரும்படியும் அழைக்கிறான்.
வீட்டுக்கு போக அவனது அம்மா வாடா என சொல்லி என்ன சாமி இப்படி புள்ள துரும்பாட்டம் வந்துருக்கியே என சொல்ல தாய்க்குலமே அதுதான் நீங்க உங்க பாசத்துலேயே தொப்பை போட வைச்சுருவிங்க என சொல்லி அம்மாவுக்கு வாங்கி வந்த புது மொபைலை கொடுக்கிறான்.
அம்மா யூஸ் பண்ண தெரியாது என சொல்ல திரு தாய்க்குலமே நான் இருக்கேன் சொல்லிக் குடுக்க என சொல்லி அம்மாவின் மடியில் தலை வைத்து படுக்கிறான் திரு.
ஏவ்.. என எப்பம் சத்தம் கேட்க திரு அம்மாவை பார்த்து இன்னும் இவர் மாறவே இல்லையா என சொல்லி அப்பாவை பார்க்க செல்கிறன் திரு.
கண்ணும் கண்ணும் பார்க்கையில் அத்தியாயம் 3 என தொடரும்.