புரியா புதிர்
புரியா புதிர்
நீ வேண்டும் என்று என் மனம் நினைக்க வேண்டாம் என்று நீ கொடுத்த காயம் உறைக்கிறது
உன் கரம் பிடிக்க ஒரு புறம் ஆசை
ஆனால் உன் நிழல் கண்டு நடுங்குகிறது நீ தந்த வலி
என்ன செய்வது உன் நினைவுகள் தேடி கடல் அலைப்போல ஓடுகிறேன்
மணல் போல நீ தந்த வலியோ என் மனதோடு ஒட்டிக்கொண்டதே
மறக்கவும் முடியாமல் நான் மறையவும் இயலாமல் புரியா புதிராக இருக்கிறது இந்த உணர்வு?
இப்படிக்கு,
உன் பாதி

