The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Kalai Selvi Arivalagan

Tragedy

4  

Kalai Selvi Arivalagan

Tragedy

பிரிந்தாயே....

பிரிந்தாயே....

1 min
23K


ஏன் என்னைப் பிரிந்தாய்

இன்றும் எனக்கு

ஒரு விடை தெரியாத கேள்வி!

நம்மைப் பிரித்தது

விதியா என்று விவாதிக்க

நேரமில்லை எனக்கு!

வறண்ட உணர்வுகளின்

மிதமான தாக்கத்தினால்

கனவுகள் கலைத்த

இரவு தூக்கமாய் நீ!

சட்டென்று சரிந்திடும்

மேம்பாலத்தினில்

தறிகெட்டு ஓடும்

வாகனமாய் என் நினைவுகள்!

காற்றினில் பரந்து

நெஞ்சினை அடைக்கும்

நஞ்சு கலந்த

காலை நேரக் காற்றாய்

என் வாழ்வினில் நுழைந்தாய்!

இன்று அத்தனையும்

இழந்து தனிமையில்

தவிக்கும் நிலையினைத்

தந்தாய் எனக்கு நீ!

மழை நீரின் தொடுதலில்

சிலிர்க்க மறந்த உணர்வுகள்

மரத்த வாழ்வினை நான்

வாழும் தண்டனையை ஏன்

நீ எனக்குத் தந்தாய்?


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy