STORYMIRROR

முனைவர் மணி கணேசன்

Tragedy

5  

முனைவர் மணி கணேசன்

Tragedy

புதைகுழிகள் பூக்கள்

புதைகுழிகள் பூக்கள்

1 min
619

காற்றின் முதுகில்

பள்ளி மணியோசை


கையில் நாற்றுகளுடன்

நிமிரும் கூன் விழுந்த பார்வை


பரந்த வானில்

ஒற்றையாய் விரியும் சிறகு


ஓட்டைக் கூரையில்

ஒழுகும் சூரியன்

முதுகு கீறும்

வைர ஊசியாய்.


களைத்துப் போன

சேற்றுக்கால்களுக்குக்

களத்துமேட்டுக் கருவேல மரங்கள் தாம்

எப்போதும் ஆசுவாசக்குடைகள்.


இருட்டைச் சுவாசிக்கிறது

கரையான் தின்னும் குடிசை.


சிக்கிமுக்கிக் கற்கள் கிடைக்குமா?


தீக்குச்சியின் கொண்டையில்

குழந்தையின் பெருங்கனவு.



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy