STORYMIRROR

முனைவர் மணி கணேசன்

Inspirational

5  

முனைவர் மணி கணேசன்

Inspirational

வேலி போட முடியுமா?

வேலி போட முடியுமா?

1 min
522

துள்ளி வரும் காவிரியைத்

தொட்டு வணங்குவோம் 

தூர்வாரி குளம்குட்டையெலாம்

தேக்கி நிரப்பிடுவோம் 


பொழிந்திடும் மழைநீரை 

பூமிக்குள் அனுப்பிடுவோம் 

நிலத்தடி நீர்வளத்தை 

அளவின்றி பெருக்கிடுவோம்.


அணைக்கட்டி சிறைப்பிடிக்க 

அடிமையில்லை காவிரித்தாய்

அனைவருக்கும் பேதமின்றி 

அள்ளித்தரும் அன்புத்தாய்.


குறுகிய மனம் மனித

அழிவிற்கு வழிவகுக்கும் 

தோழமை உணர்வு ஒன்றே

ஒற்றுமைக்கு வலுசேர்க்கும்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational