கொரோனா
கொரோனா
1 min
426
கண்ணுக்குத் தெரியாத கிருமியால் வந்ததே
கொரோனா எனும் புதுவகை நோய்
நோயால் பாதி பயத்தால் மீதியென
மக்கள் இறக்க அச்சுறுத்தும் நோயாய்
நம்மை வீட்டுக்குள்ளேயே வருடங்கள் அடைத்தது
குழந்தைகளின் படிப்போடு கண்ணையும் கெடுத்தது
இணையவழி கல்வி என்ற பெயரில்....
இன்னுமே இதன் ஆட்டம் ஓய்ந்தபாடில்லை....
அவரவர் அவரவரை சுத்தமாக வைத்து
தன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்தாலே
இவர்களிடம் நம் ஆட்டம் செல்லாதென
கொரோனா பயந்தோடிவிடும் வந்த வழியே.....!!!
- நித்யஶ்ரீ சரவணன்