STORYMIRROR

Nithyasree Saravanan

Inspirational

4  

Nithyasree Saravanan

Inspirational

விழிக்கச் செய்வோம்

விழிக்கச் செய்வோம்

1 min
329


உயிர் பிரிந்ததும் சரீரத்தை மண்ணில் புதைத்து 


அது அழுகி புழுக்களாய் நெலிந்து மக்கி மண்ணாகி 


மண்ணோடு கலந்து விடச் செய்வதும் 


இல்லையேல் நெருப்பில் இட்டு சாம்பலாக்கி 


அதை ஆற்றில் கலப்பதுமாய் இருக்கின்ற 


நாம் விழித்துக் கொள்வது எப்போது ? 


உயிர் பிரிந்தாலும் நம் உறுப்புகளால் 


இன்னொருவர் மூலம் உயிர் வாழலாம் என 


உறுப்பு தானம் செய்பவர்களையும் ஏசுகின்றோம்... 


மண்ணாய் சாம்பலாய் ஆக்க எண்ணும் நாம் 


ஏன் மற்றொரு மனிதர்க்கு கண்ணாய் இதயமாய் 

 

சிறுநீரகமாய் நுரையீரலாய் ஏதோ ஒரு வகையில் 


அவர்கள் நலம் பேண உறுப்பை தானம் செய்தால் என்ன ? 


இதனால் எத்தனையோ பேரின் உயிரில் கலந்து 


நமக்கு பிடித்தவர் உயிர் வாழ்ந்து கொண்டு தானே இருப்பர்...!! 


விழித்துக் கொள்வோம்....


உறங்குவது போல் நடிப்பவரையும் விழிக்கச் செய்வோம்...!! 




இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational