STORYMIRROR

Narayanan Neelamegam

Abstract Inspirational

5  

Narayanan Neelamegam

Abstract Inspirational

அம்மா

அம்மா

1 min
35.7K


எதையும் 

எதிர்பார்க்காமல் 

தன்னிச்சையாக 

அன்புடன் வாழ்க்கையை 

தியாகம் செய்யும் 

நடமாடும் கடவுள் .......!!!


அன்னை முன்.....

சிகரங்களும் கடுகு தான்.... 

கடலும் நீரோடை தான்.... 

பூமியும் பூ பந்து தான்.... 

நிலமும் பாய் தான்.....

மேகங்களும் பஞ்சு தான்....

மரங்களும் குச்சி தான் ....

சூரியனும் வெள்ளி தட்டு தான்......

சந்திரனும் முத்து தான்....

இரவும் கருப்பு தான் ....

பகலும் நிறம் தான் ....


கடவுளின் நகலாய்

பரந்த உலகில் 

உலா வந்து 

உயிரினும் மேலாய் 

பாசத்தை ஊட்டி 

படும் கஷ்டங்கள் 

எண்ணில் அடங்கா ......


எதுவும் தனக்கென்று யோசிக்காமல் - என்றும் 

எல்லோருக்காகவும் யோசிப்பாள் ......


எல்லார் பற்றியும் கவலை படுவாள் - என்றும் 

தனக்காக கவலை படமாட்டாள்..... 


எனக்காக நீ பட்ட வலிகளை அடைக்க - எனக்கு 

ஒரு ஜென்மம் போதாதே....


அன்னையாய் .....

எப்படி நீ மட்டும் 

எல்லாம் புரிந்து 

எதையும் கையாள்கிறாய் - ஓ 

ஒரு சகோதரியாய்..  

ஒரு நண்பியாய்.. 

ஒரு மனைவியாய்..  

சுமந்த சுமைகள் தானோ .....


உனக்காக ஒரு கனவு ....

உனக்கென்று ஒரு நிஜம் ...

உன்னோடு ஒரு நிழல் ...

எதுவும் இல்லை ஏன் ?...


அன்னையே ...

நீ ஒரு பொதுநலத்தின் பிறப்பிடம் .....!!!

நீ ஒரு பொக்கிஷத்தின் உறைவிடம் ..!!!  


அம்மா ...  

கவலைகள் கண்ணில் இருந்தாலும் ...!

சுமைகள் நெஞ்சில் இருந்தாலும் ...!

புன்னகையுடன் எதிர் கொள்ளும் ...!

பக்குவம் உனக்கு யார் தந்தது ....!


தாயே ....

உணர்வுகளை நீ புரிந்து....

அன்பை மட்டுமே வெளிகாட்டும் ....

ஒரு கருணையின் இருப்பிடம் ....


நீ இருக்கும் போது 

கல்லாய் இருந்த என் இதயம் 

உனக்காக ஒரு நொடியும் இல்லை 


நீ இல்லாத இப்போது  

என் இதயத்தில் ஒரு இடம்

உனக்காக என்றுமே ....எப்போதுமே ...


ஏங்குகிறேன் உனை காணாமல் ...

தரிசனம் தருவாயா ஒரு முறை ....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract