SANTHOSH KANNAN

Abstract

4.5  

SANTHOSH KANNAN

Abstract

பொங்கல் தாத்தா

பொங்கல் தாத்தா

1 min
738


பொங்கல் தாத்தா வந்தாரே பொங்கல் வச்சுத் தந்தாரே

கட்டிக் கரும்பை வாங்கியே

வெட்டித் திங்கச் சொன்னாரே


பச்சை ஆடை அணிந்துமே

பசுமைப் புரட்சி செய்தாரே

வெள்ளை முண்டாசுக் கட்டிலே வெண்மைப் புரட்சி தந்தாரே


இயற்கை உணவைத் திங்கவே இதயம் பலம் ஆகுமாம்

செயற்கை உணவைத் தின்னாலே கெட்ட மலம் கூடுமாம்


ஆயுள் வளர என்றுமே

ஆவியில் வெந்ததைத் திங்கனும் ஆயில் உணவை நாமுமே

அறவே வெறுத்து ஒதுக்கனும்


அதிகாலை எழுதல் நன்றாமே

ஐயா எமக்குச் சொன்னாரே

ஆதவன் கதிர்கள் பட்டிடவே அனுதினம் நடக்கச் செய்தாரே


அன்பை வளர்க்கும் இனத்திலே அறிவை விதைத்துச் சென்றாரே பண்பைப் போற்றும் குணத்திலே பயிரை உயிராய்க் காத்தாரே


நம்ம தாத்தா நம்மாழ்வார்

நம்மை எல்லாம் ஆள்வாரே

சிம்ம சொப்பனம் என்றுமே

சீமை வெள்ளத் துரைகளுக்கு


தாத்தா சொல்லைக் கேட்கணும் ஆத்தா அப்பனைக் காக்கனும் கலப்பை பூட்டி என்றுமே

கஞ்சி குடிச்சுப் பொழைக்கனும்



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్