மௌனத்தில் புதைந்த கேள்விகள்
மௌனத்தில் புதைந்த கேள்விகள்
காலையில் உதிப்பதை சூரியன் என்றால்;
மாலையில் மறைவதை என்னவென்பாய்?
இன்பத்தில் அழுவதை ஆனந்த கண்ணீர் என்றால்;
துன்பத்தில் அழுவதை என்னவென்பாய்?
கண்ணீரை துடைக்கும் கரங்கள் மனிதனின் என்றால்;
கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்?
காதலில் இன்பம் துன்பம் மட்டுமே நிறைந்திருக்கும் என்றால்;
ஏமாற்றத்தை என்னவென்பாய்?