STORYMIRROR

Ravivarman Periyasamy

Abstract

5  

Ravivarman Periyasamy

Abstract

பெருமிதம்

பெருமிதம்

1 min
139

நான் ஆசிரியன் என்பதில் 

பெருமை கொள்கிறேன்

ஏனென்றால் அவனே

விதியைக்கூறி விதியை மாற்றும்

வித்தகன்

காணாமல் கற்றான் ஏகலைவன்

இன்றும் அப்படியே

அன்றோ ஒரு துரோணர்

இன்றோ பல துரோணர்கள்

அதுவும் கட்டை விரலை

தட்சணையாக கேட்காத துரோணர்கள்

மாணவர்களின் அறிவுக் கட்டை

அவிழ்த்து விடத் துடிக்கும் துரோணர்கள்

ஆசிரியன் என்பதில் 

பெருமை கொள்கிறேன்

பால் பேதமின்றி

ஆள் பேதமின்றி

அனைவரையும் ஆக்குபவன் 

ஆசிரியன்

கற்பனைத்தேரில் 

கற்பவனைக்கட்டி

கடிவாளமிட்டு

சாட்டையை சுழற்றி

இந்த உலகையே கண்முன் கொணர்ந்து

நிறுத்துவான் ஆசிரியன்

நான் ஆசிரியன் என்பதில்

பெருமை கொள்கிறேன்

தான் செய்த குற்றத்தை திருத்துபவன்

தான் கண்ட குற்றத்தை களைப்பவன்

தான் என்றும் நான் என்றும் கணம் இல்லாதவன்

தான் நின்று வளர்ப்பான்

தன்னையும் வளர்த்துக் கொள்வான்

ஆகையினாலே

ஆசிரியன் என்பதில் 

நான் என்றும்

பெருமை கொள்கிறேன்



Rate this content
Log in

Similar tamil poem from Abstract