என் பாரதி
என் பாரதி
செஞ்சோற்று கடன் தீர்த்தவன் பாரதி
கருப்பு உடையில் முறுக்கு மீசையில்
செங்கவியில் நிமிர்ந்த நன்னடையில்
ஒரு பெரும் சமரையே செய்துவிட்டான்
கூட்டமொன்றும் அவனை காட்டமாக்கவில்லை
தனி ஒருவனாய் தரணியையே தடம் மாற்றினான்
இருட்டிற்குள் விடியலைக் கண்டான்
அந்த விடியலைக் காணவும் வைத்தான்
தீச்சுடர் மையால் துப்பாக்கியைத் துளைத்தான்
ஆயுத மொழியால் வழியைத் திறந்தான்
அச்சத்திற்கே அச்சத்தை உண்டாக்கினான்
வேட்டையாடாமலே வீரம் எதுவென்பதை காட்டினான்
என் பாரதி தமிழின் காதலன்
தன்னலமில்லா மானுடன்
அவன் எனக்குள்ளே என்றும்
மொழியாய் ஒளியாய்...