மாலை நேர சந்தை...
மாலை நேர சந்தை...
வயதான தாத்தா தனது பேரனோடு காய்கறி பையோடு
பேரன் கையில் வெள்ளரி
அவர் கையில் முத்து சோளம்...
பொக்கை வாய் கிழவி வெங்காயம் விற்று கொண்டிருக்கிறாள்...
வயிற்றில் பெற்றெடுத்த குழந்தையை இடுப்பில் சுமந்தபடி தாய் ஒருத்தி காய்கறி வாங்க...
கீரையையும் காய்கறிகளையும் பேரம் பேசி வாங்கும் வயது முதிர்ந்த கிழவன்...
பேரம் பேசாமலே காசு கொடுத்துச் செல்லும் இளைஞன்...
பீடியை உறிஞ்சியபடி இருமிக் கொண்டு காய்கறி பையை தனது வண்டியில் வைத்து வண்டியை நகர்த்தி செல்கிறார் கிழவன்
அவர் உறிஞ்சிய புகை பக்கத்தில் இருக்கும் ஒருவர் மீது பட்டு
அவரும் இருமிக் கொண்டிருக்க...
இதை எடுத்தா பத்து
அதை எடுத்தா பதினஞ்சு
எல்லாமே இருபது ரூபா
அப்படின்னு கூவி கூவி விற்கும் காய்கறிகார அம்மா ...
ஒரு நடுத்தர வயது ஆள்
தோல் மேல துண்டு போட்டுட்டு மீசையை முறுக்கிட்டு உட்கார்ந்து இருக்காரு...
காய் விற்க வந்தவரோ...
இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நான்...
காய்கறி வாங்கிட்டு நான் எங்க இருக்கன்னு தேடிட்டு இருக்க எங்க அப்பா...
எங்கிட்ட காய்கறி பையை குடுத்துட்டு முத்து சோளம் வாங்கல மறந்துட்டேன்னு சொல்லி மறுபடியும் போய் முத்து சோளம் வாங்கிட்டு வர்றாரு எங்க அப்பா பேத்திகளுக்காக...
இந்த சம்பவத்துக்கு நடுவே எடை குறைக்க வேண்டுமா... அப்படின்னு இருக்க ஒரு விளம்பர அட்டைய ஒரு சின்ன பொண்ணு என்கிட்ட குடுத்துட்டு போறா...
அதே நேரம் பக்கத்து கல்யாண மண்டபத்துல ஒரு பாட்டு ... குண்டு கத்தீரிக்கா... குண்டு கத்திரிக்கா...
குட்டி தங்கைக்கு செருப்பு வாங்கி அளவு சரியா இருக்கானு போட்டு பார்க்கும் குட்டி அக்கா...
இதெல்லாம் போக ...
பகலவன் சிவந்திருந்தான்
அந்த காய்கறி அம்மா நெற்றியில் வைத்திருக்கும் சிவப்பு குங்குமம் போல...
அவனுக்கு யார் மீது கோபமோ... இருட்டின் மீதா...
இருட்டு வர காத்திருந்த நிறைய பேர் காய்கறியை குறைந்த விலை கொடுத்து வாங்க கிளம்பி விட்டனர்...
சூரியன் மறைந்து
அடுப்பு எரிக்க
நிறைய பேரின் வயிற்று பசி தீயை
அணைக்க
அந்த மாலை நேர சந்தை
காத்திருந்தது
இருட்டு வரை...
