STORYMIRROR

Ravivarman Periyasamy

Romance

3  

Ravivarman Periyasamy

Romance

நான் வருவேன்

நான் வருவேன்

1 min
81

தாள்கள் பாவம் செய்து விட்டன என் எழுத்துகளை சுமந்து

அவள் வாழைக் கைகளால் வருடப்பட்டு செங்காந்தள் இதழ்களால் வாசிக்கப்பட்டால் மோட்சம் அடையும் 

நானும் பாவம் செய்தவனானேன்

அவளால் எனக்கு மோட்சம் கிடைக்குமோ

தாளுக்கு தந்த மோட்சத்தை 

தலைவனுக்குத் தர தாமதம் ஏனோ 

வாசிக்கவோ வருடவோ தேவை இல்லை 

காந்தக் கண் பார்வையும் 

கவிச் சிரிப்பும் போதும்

மோட்சம் அடைந்து விடுவேன் உன்னுள் 

மறந்து போய் விடாதே

மறு பிறவி எடுக்க எனக்கு ஆவல் இல்லை

இப்பிறவியிலேயே என் பாவத்தை உன் பாவத்தால் மடிய செய்துவிடு

மறுபிறவி நீ வாராய் ஆனால்

மீண்டும் நான் வருவேன் 

வருவேன் உனக்குள் உறைய



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance