STORYMIRROR

Bakyanathan Sivanandham

Abstract

5  

Bakyanathan Sivanandham

Abstract

அன்பு

அன்பு

1 min
1.1K

விந்தையான உலகின் விந்தை அன்பு

அன்பால் ஒருவனைக் காக்கவும் இயலும்

அன்பால் ஒருவனைத் தாக்கவும் இயலும்

அன்பு செலுத்தாது வாழ்ந்தால் மிருகமாகிறோம்

அன்பு செலுத்தி வீழ்ந்தால் அடிமையாகிறோம்

ஒருபுறம் மட்டும் இருந்தால் ஓய்ந்து போகிறோம்

இருபுறம் இணைந்திருந்தால் சிலிர்த்து சிரிக்கிறோம்

மறுபுறம் பிரிந்தால் மரணவேதனை கொள்கிறோம்

பொய்யான அன்பைக் கண்டு களைத்துப் போகிறோம்

மெய்யான அன்பைக் கண்டும் காணாமல் வாழ்கிறோம்

மெய்யான பொய்யை புறம் தள்ளுகிறோம்

பொய்யான மெய்யால் அகம் மகிழ்கிறோம்

எங்கே என நாடித் திரிகிறோம்

இங்கே எனக் காண மறக்கிறோம்

அங்கே எனக் கூறி திரிகிறோம்

இல்லை எனக் குறள் கேட்கிறோம்

இல்லை என மனம் வெறுக்கிறோம்

போதும் எனப் பொருள் கொள்கிறோம்

போதாது என மீண்டும் செல்கிறோம்

வேகாது என மீண்டும் கற்கிறோம்

நோகாதே என தெற்றிக் கொள்கிறோம்

தெறினால் மீண்டும் தேடுகிறோம்

நிலையான நிலை என்றோர் நிலை இல்லை என்று தன்நிலை

கொள்ளும் கணம் கனம்!!

வினை மட்டும் விதைத்து எதிர்வினை நோக்கா குணமே தரும் சுகம்!!!


                                


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract