STORYMIRROR

Bakyanathan Sivanandham

Abstract

4  

Bakyanathan Sivanandham

Abstract

அம்மா

அம்மா

1 min
322

நம் உதடுகள் உளறிய முதல் வார்த்தை அம்மா

நாம் வலி ஏற்பட்டால் அலறிய ஒரு வார்த்தை அம்மா

வீட்டில் நுழைந்தவுடன் வெளிவரும் வார்த்தை அம்மா

அதிகம் சிரிக்கும் போது வரும் வார்த்தை அம்மா

மலைப்பு ஏற்படும் போது வரும் வார்த்தை அம்மா

நம் கண்கள் கண்ட முதல் இருட்டு தாயின் கருவறை

நம் கண்கள் கண்ட முதல் ஓளி தாய் மடி

நாம் பசியாறிய முதல் அன்னம் தாயின் ரத்தம்

நாம் தவழும் போது துரத்திய மிருகம் தாய்

நாம் நின்ற போது நிறுத்திய கைகள் தாயின் கைகள்

நாம் நடந்த போது நம்முடைய இலக்கு தாய்

நாம் வளரும் போது நம் குடை தாய்

நாம் வளர்ந்த பிறகு நம் முதல் குழந்தை தாய்

பெற்ற தாயை பேணிக்காக்கும் ஆண் கூட தாய் தான் !

இல்லம் வளர்த்த தாய்க்கு முதியோர் இல்லம் வழங்கா

உலகு வேண்டும் தாயே!!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract