STORYMIRROR

Ravivarman P

Abstract

3.6  

Ravivarman P

Abstract

கோழை மர(ற)ம்

கோழை மர(ற)ம்

1 min
191


கோழையை விட்டு எழுந்த நீ

கோழையை விட்டு எழு

மதி உன்னை

சதியில் இருந்து காக்கும்

மரம் காத்து

மறம் காக்க

நம் பாட்டனும் பூட்டனும் சொல்லித்தந்தான்

ஆனால் இங்கே

மரமும் இல்லை

மறமும் இல்லை

நீ பிறந்த பின்

கோழையை உதரினாய்

இறக்கும் முன்னும்

கோழையை உதறு

உன்னை உலகு அறியா

ஆனால் பிரபஞ்சம் அறியும்

நீயும் அறி

யார் நீ என்று

மதிப்பில்லா தாளை

நீ மதிப்பாயானால்

மதி கெட்டு அலைவாய்

அளை வாயிலிருந்து மீள்

வாழ் வீரத்தோடு

அறி மதியோடு

நீ வாழ்ந்து கொண்டே இருப்பாய்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract