ஆசானின் தாசன்
ஆசானின் தாசன்
அன்னை விட்டுவந்த பள்ளியில்
அகரம் தொடங்கி வைத்து
ஆசிரியர் அரவணைத்த போது
ஆரம்பக்கல்வி நெஞ்சிலே புதைத்து
இளமை யெட்டும் வரையில்
இணையற்ற கல்வியை கொடுத்து
ஈடில்லா இளைஞனை உருவாக்கவே
ஈடுபாடோடு மறுமுனையில்தொடரும்
உங்கள் உழைப்பின் அடையாளம்
உயரந்தவர் அனைவரின் வெகுமானம்
ஊர்சொல்லும் பிள்ளைகள் எல்லாம்
ஊறியதும் உங்கள் கனாதானே
எண்ணெழுத்து இகழேல் சொன்னதும்
எண்ணங்களை மெய்பட வைத்ததும்
ஏணிபோல எங்களை ஏற்றிவிட்டு
ஏணியாகவே நிலைத்து நின்றதும்
ஐயனின் பெருமிதத்தை பேசும்
ஐயனோ கடமையெனறே கடக்கும்
ஒழுக்கம் தழுவிய ஒருமைப்பாடு
ஒப்பற்ற கல்விக்கு ஒத்துழைப்பு
ஓய்வறியாத உங்கள் சேவையும்
ஓடிக்கொண்டே இருக்கட்டும் வழிகாட்ட