STORYMIRROR

Siva Kamal

Tragedy

5  

Siva Kamal

Tragedy

வருத்தம்

வருத்தம்

1 min
692

நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என

நான் நினைக்காத நாள் இல்லை


ஆனால்

உன் துயரங்களின்போது மட்டுமே

நான் உன் நினைவுக்கு வருகிறேன்


உன் வருத்தங்களைத்துடைக்க

நான் எனக்குத் தெரிந்த 

எல்லாவித்தையையும் காட்டுகிறேன்


ஆனால்

நீ சிரிக்கும்போது

ஒரு நாளும் நான் உன்னோடு இருந்ததில்லை


உன் எல்லா துக்கங்களும்

இல்லாமல் போகவேண்டும்

என்பதுதான் எப்போதும் என் பிரார்த்தனை


அப்படி இல்லாமல் போகும்போது

அந்த துக்கங்களோடு சேர்ந்து

நானும் இல்லாமல் போவேன் என்பதுதான்

எனது ஒரே வருத்தம்


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy