STORYMIRROR

Siva Kamal

Tragedy

3  

Siva Kamal

Tragedy

கேட்பவர்கள்

கேட்பவர்கள்

1 min
220

என் பிரிவொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன்

என் புரிதலொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன்

என் கனவொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன் 

என் வலியொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன் 

என் மீட்சிக்கான பரிதவிப்பொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன் 

நான் எப்படியிருக்கிறேனென்று சொல்லிக்கொண்டிருந்தேன் 

ஒரு கொட்டாவி சட்டென எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது சொல்ல வந்தது எனக்கும் பாதியில் மறந்துவிட்டது 

அவ்வளவுதான் இந்த உலகில் சொல்ல முடியும். சொல்பவர்கள் தூங்காதிருக்கலாம். கேட்பவர்களுக்கு சீக்கிரமே தூக்கம் வந்துவிடுகிறது


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy