வேற்றுமையில் ஒற்றுமையா ?
வேற்றுமையில் ஒற்றுமையா ?
வாழு பிறரையும் வாழ விடு
நன்றாய் வாழ்ந்திட பேதம் களைந்து விடு
பற்று பக்தி கொண்டு இரு
வெறியாய் அதை நீ மாற்றாதிரு
மொழி மதம் இனம் நாடு வேற்றுமையில்
மனிதமே அழியுது போற்றுகையில்
மதத்தால் மரணிக்கும் மனிதமதில்
கடவுளும் கற்சிலை கலவரத்தில்
பற்றும் பக்தியும் மாறிடுமா
உருமாறின் வெறியாய் ஆகிடுமே
பேதம் காட்டும் பேதைமையில்
உன் கண்களும் வெறியால் நிரம்பிடுமே
மொழியோ நம்மை பிரிக்கும்
மதமோ பிறரை ஒதுக்கும்
இனமோ நம்மில் உறுத்தும்
ஒரு காரணியாய் இருக்கும்
இங்கே தமிழன் என்றே சொல்லி சொல்லி
தலைநிமிர்ந்து நில்லு என்பான்
இந்த எண்ணம் உந்தன் நிறைவா
பிற மொழிகளின் தரம் குறைவா
அட எதுக்கு எதுக்கு இந்த பேதம்
மனிதநேயத்தில் உண்டாச்சு சோகம்
என்று அடங்கும் இதனின் தாக்கம்
ஊரே போர்க்கொடி தூக்கும்
மாற்ற நினைக்கும் யாவும்
இங்கே மாற வேண்டுமாயின்
மாற்றம் முதலில்
உனக்குள்ளே வேண்டுமடா
நாட்டுப் பற்று என்றும்
நாட்டை மட்டும் நினைக்கும்
அயல்நாட்டை நம்மில் ஒதுக்கி
அட அயன்மையாய் வைக்கும்
நீ இந்தியன் என்றே என்றும் சொல்லி
நம்மை பெருமை கொள்ளவே பணிப்பான்
இந்த பெருமை உன்னிலே நிலைக்க
அயல் நாட்டை அரித்தெடுப்பான்
நெஞ்சை கீறி கீறி அதனுள்ளே
விதை விதைத்திடு உனக்குள்ளே
மரமாய் அதுவும் மாறும் நாளில்
இங்கு மாற்றம் உண்டாகும்
மாற்ற நினைக்கும் யாவும்
இங்கே மாற வேண்டுமாயின்
மாற்றம் முதலில்
உனக்குள்ளே வேண்டுமடா