ஏமாற்றாத அன்பு
ஏமாற்றாத அன்பு
என் இறைவா என் இறைவா என் உள்ளம் ஏங்கிடுதே
ஏங்கும் உள்ளம் தாங்கிடுமா ஏமாற்றும் அன்பின் வலி
என் மனதும் தாங்கிடுமோ ஏமாற்றும் ஓர் அன்பை
என் இறைவன் அருள்வாரா ஏமாற்றா ஓர் அன்பை
ஆதி முதல் அந்தம் வரை வாழ்வினிலே என்றும் அன்பு வேண்டும்
அந்த அந்தத்தையும் ஆதியாக்கிடும் ஏமாற்றா அன்பொன்று
கருவறையில் உருவாகினோம்
கல்லறையில் உருமாறினோம்
இடைப்பட்ட இவ்வாழ்வில் இறைவன்
அருள்வாரா இவ்வரத்தை
அன்பை மீறிய ஆயிரம் செயல்கள் உலகினிலே என்றும் இருக்கக்கூடும்
அந்த ஆயிரத்திற்கும் அன்பு ஒன்றே ஆணிவேராய் இருந்திடுமே
ஏமாற்றா அன்பை பெற்றவன்
ஏராளம் நன்மை செய்தவன்
ஏசுகின்ற மனிதரையும்
ஏசுவாக்கிடும் ஏமாற்றா அன்பு