பொங்கல்
பொங்கல்
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை கொண்டாடிடும் தமிழர்களே
தமிழ்நாட்டை தவிர வேறு எங்கிலும் இல்லை இந்த திருநாளே
தமிழரின் பெருமையை
தமிழனே அறிய
தலைமுறை ஒன்று போதாதே
தலைமுறை தாண்டிய
அவனது பெருமையை
தமிழனே நீ என்றும் மறக்காதே
சூரியனுக்கு முதல் நன்றி சொல்லணும் என்று வந்ததே பொங்கல் தினம்
மாட்டிற்கு அடுத்த நன்றி அதை சொல்லி வந்ததே தமிழர் குணம்
வேளாண்மை செய்து வாழ்ந்தான்
அவன் வேட்டையாடுதலை விட்டபின்பு
இன்று வேடிக்கையானது அவன் வாழ்க்கை
இயற்கையும் அவனை கை விட்ட பின்பு
மும்மதமல்ல எம்மதமும் கொண்டாடும் பொங்கலோ தை மாதம்
எம்மதமாயினும் தமிழன்தான் இவ்விழாவினில் இல்லை மதபேதம்
ஆலயத்தில் பொங்கல் வைப்போம் நாம் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள
அன்பு செய்து வாழ பழகுவோம்
அகிம்சை வழியினில் நடந்து செல்ல