வாழ்விடம்
வாழ்விடம்
மண் உருண்டைகள் கொண்டே
அன்னையும் தந்தையும் உருவாக்கிய
அண்ணன் அக்காள் தம்பி தங்கையென
அறுவரும் பிறந்தோம் முட்டைகளில் இருந்தே !
அன்னையும் தந்தையும் உணவு தேடிச் செல்கையிலே
கவனமாய் தானிருந்தே வேடிக்கை பார்க்கிறோம் -
எம்மைத் தாண்டிச் செல்லும் மனிதர்களையே தான் !
எம் வாழ்விடமாம் காடு மரமெலாம் உங்களாலே அருகி வர
மானிடர்களே ! உங்கள் வாழ்விடத்தில் வாழவே
நாங்களும் வந்துள்ளோம் !
உங்கள் சுயநலம் நன்கறிந்த போதும்
மோதிப் பார்த்திட துணிந்தோம் !
எம் நிலை உமக்கும் வர - நாட்கள் அது
வெகு தொலைவில் இல்லை !
எண்ணிக் கொண்டே இரு -
நெருங்குகிறது உமது அழிவுக் காலம் !