STORYMIRROR

Siva Kamal

Tragedy Crime

5  

Siva Kamal

Tragedy Crime

சபிக்காதே

சபிக்காதே

1 min
914

ஏதோ கோபத்தில்

ஒருவனை சாகும்படி

சபிக்கபோனவன் 

அப்படியே அதை விழுங்கிவிட்டேன்


என் வாழ்த்துகளைப்போலவே

நான் சபிப்பதால்

அவனுக்கு ஒன்றும்

ஆகப்போவதில்லை


ஆயினும்

யாரும் யாரையும்

விளையாட்டிற்குக்கூட 

இந்தக்காலத்தில்

'செத்துப்போ' என

சொல்லக்கூடாது


நீங்களும்

நானும்

அவனும்

வாழ்வுக்காக

ஒன்றுபோலவே போராடும்போது


மனிதர்கள்

பறவைகள்போல

அழியும் காலத்தில்


நீ விளையாட்டிற்குக்கூட.

யாரையும் சபிக்காதே


மனிதர்களை எப்படியாவது

இந்தக் காலத்தில்

காப்பாற்றிவிடவேண்டும் என்பதைத்தவிர

வேறெதையும் நினைக்காதே


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Tragedy