STORYMIRROR

Siva Kamal

Romance Tragedy Classics

5  

Siva Kamal

Romance Tragedy Classics

வலி

வலி

1 min
654

பிறர் வலியை 

என் வலியாகவே

உணர்ந்து உணர்ந்து

எனக்குப் பழக்கமாகிவிட்டது


பிறகு ஒரு நாள்

சுயமாகவே எனக்கு வலித்தது

நான் பிறரைத்தேற்றுவதுபோலவே என்னை தேற்றினேன்

பிறர் கண்ணீரைத் துடைப்பதுபோலவேதான்

என் கண்ணீரையும் துடைத்துக்கொண்டேன்


நம்புங்கள்

இந்த அன்பில் 

உங்களுக்குத் தந்ததைவிட ஒரு சிறிதேனும் நான் கூடுதலாக எடுத்துக்கொள்ளவில்லை


மேலும்

'பயப்படாதே உனக்கு நான் இருக்கிறேன்' என

எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டு சிலர் என்னை பைத்தியம் என்று நினைக்கிறார்கள்


வேறு வழியில்லாமல்தானே நான் அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறேன்🙄


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance