திருநங்கை
திருநங்கை
இயற்கையின் சதி
கருவிலே கலையாது
மெய்யிலே ஆணும்
உள்ளத்திலே பெண்ணுமாய்
திருத்தப்பட்டு திணறுகிறோம்
திருநங்கையாகிய நாங்கள்.
திரும்பிய இடமெல்லாம்
ரணமாகும் மனம்
தினந்தோறும் மனந்தேடும்
மரணம்- விதைத்தவனும்,
வினளநிலமும் களையாய்
கண்டதால் கரைந்தோடிய
கனவோடு கலவி
கைப்பாவையாகினோம் நாங்கள்
கோள்களுடனும் தானியங்களுடனும்
பட்டத்தை பகிர்ந்தோம்
பசிக்கும் வயிற்றுக்கு
கைத்தட்டலை பதித்தோம்
உழைக்க மனமுண்டு
உதவ யாருமில்லை
உணர்வை உணரவுமில்லை
இப்படிக்கு
உறவற்று புதுஉணர்பெற்ற
நாங்கள்