STORYMIRROR

Siva Kamal

Romance Tragedy Classics

5  

Siva Kamal

Romance Tragedy Classics

உன்னோடு பேசுவது

உன்னோடு பேசுவது

1 min
612

நீ மெளனமாக இருக்கும்போதும்

உன்னோடு பேசுவது எப்படி?

அப்போது ஒரு மீனோடு பேசுவதுபோல

உன்னோடு பேசவேண்டும்


மீன் தொட்டிக்கு அருகில் வந்ததும்

மீன்கள் எவ்வளவு ஆவலாய்

வாயைத்திறந்து பேசுகின்றன


அப்போது அங்கே 

நீர்க்குமிழிகள் உருவாகின்றன

அவையே மீனின் சொற்கள்


மீனின் குரலை

உற்றுக்கேட்க முடியாதவர்களால்

உனது காதலின் குரலையும்

ஒருபோதும் கேட்கவியலாது


எனக்கு

மீன்கள் பாடுவதுகூட

கேட்கிறது


Rate this content
Log in

Similar tamil poem from Romance