நானாக
நானாக
நெருப்பின் வெம்மைதனில்
குளிர்ந்து தணிந்தது
உன் தேகத்தில்
படர்ந்து தேங்கிய
வலிகளின் சுவடுகளே!
எத்தனையோ முறை
நான் உணர்ந்த
வாழ்வின் இரகசியத்தினை
மறுபடி ஒரு முறை
இறைவன் எனக்கு இன்று
உணர்த்தியது ஏனோ?
வாழ்வின் எல்லையினில்
மீண்டும் மீண்டும்
உணர்த்திடும் அத்தனை
உண்மைகளையும்
மறக்க முடியாத
தருணங்களாக நீ!
தவித்து நிற்கும்
மனதாக நான்!