STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Abstract Tragedy Classics

3  

Kalai Selvi Arivalagan

Abstract Tragedy Classics

நானாக

நானாக

1 min
220

நெருப்பின் வெம்மைதனில்

குளிர்ந்து தணிந்தது

உன் தேகத்தில்

படர்ந்து தேங்கிய

வலிகளின் சுவடுகளே!

எத்தனையோ முறை

நான் உணர்ந்த

வாழ்வின் இரகசியத்தினை

மறுபடி ஒரு முறை

இறைவன் எனக்கு இன்று

உணர்த்தியது ஏனோ?

வாழ்வின் எல்லையினில்

மீண்டும் மீண்டும்

உணர்த்திடும் அத்தனை

உண்மைகளையும்

மறக்க முடியாத

தருணங்களாக நீ!

தவித்து நிற்கும்

மனதாக நான்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract