என்னவனின் பிரிவு...
என்னவனின் பிரிவு...
வலிகளில் கூட வலியை கொடுத்தவனை நினைக்கும் விந்தை காதலில் மட்டுமே உண்டு
காரணம் தெரியவில்லை எனினும் என் காவியதலைவனை தேடுகிறது.. இந்த உலகம் தரும் வலி அவன் நினைவுகளால் ஆறிவிடும் என்பதானாலோ என்னவோ....
இந்த வலியில் விழி மூடும்போது வந்த அந்த இரு நீர்த்துளி உன் பெயரைதான் அழைக்கிறது...
வருவாய் என விழி திறந்திருக்க
மாட்டாய் என மனம் கதற இந்த இடைவேளையில் முழுமையாக விழி மூடிடுமோ என மனம் பதைக்கிறது
விரைந்து வா உன்னவள் காத்திருக்கிறேன் ❤

