Vadamalaisamy Lokanathan

Crime

4  

Vadamalaisamy Lokanathan

Crime

ஆன்மீக குடில்

ஆன்மீக குடில்

2 mins
230



ராஜா ஒரு பத்திரிகையின் நிருபர்.

ஆங்கில தினசரி,அதுவும்,இந்தியா

முழுவதும் விநியோகம் ஆகும் பத்திரிக்கை.

அந்த  ஊரில் ஒரு ஆன்மீக குடில்,அங்கு சென்று பயிற்சி எடுக்கும் இளம் பெண்கள் காணாமல் போவதாக வதந்தி.உச்ச நீதி மன்றம் வரை புகார் சென்றுள்ளது.

ஆனால் இது வரை எந்த புலனும் கிடைக்கவில்லை.அதை பற்றிய விவரம் ஏதாவது கிடைக்குமா என்று அறிந்து கொள்ளவே ராஜா அங்கு வந்துள்ளான்.

அந்த குடிலின் தலைவர் உலக அளவில் பிரபலமானவர்.அரசியல் செல்வாக்கு உள்ளவர்.எளிதில் உள்ளே சென்று எந்த விவரமும் கண்டு அறிய முடியாது.

ராஜா ஒரு 

 விசுவாசி போல அங்கு சென்றான்.உள்ளே நுழையும் போதே,அவனை பற்றிய முழு விவரமும் வாங்கி கொண்டார்கள்.

எதற்கு வந்து உள்ளான்,எத்தனை நாள் இருப்பான்.எதில் அதிக ஈடுபாடு,என்று அவன் ஜாதகம் முழுவதும் வாங்கி கொண்டு தான் உள்ளே அனுமதித்தார்கள்.

அங்கு சேர்ந்து தினமும் அங்கு சொல்லி கொடுத்த பயிற்சிகளை முழு ஈடுபாட்டுடன் பழகி கொண்டு இருந்தான்.அப்போது தான் ஒரு பெண்ணை பார்க்க நேரிட்டது.அவளும் ஒரு பத்திரிக்கை நிருபர்,ஆனால் அவளை பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது.மேலும் அவள் இரட்டை சகோதரிகள் அதில் ஒருத்தி இவள்.

இரட்டையர் என்பதும் வெளியில் யாருக்கும் தெரியாது.

ராஜாவிற்கு ஓரளவு ஊகிக்க முடிந்தது.அவளை தனியாக சந்தித்து பேச முயன்றான்.ஆனால் எங்கு திரும்பினாலும் கண்காணிப்பு கருவிஅதிகம் இருந்தது.

பொதுவாக பேசுவது போல அருகில் சென்று,நடக்கும் பயிற்சிகளை மட்டும் பேசி தன்னை அறிமுக படுத்தி கொண்டான்.அவளும் உங்களுக்கு சில பயிற்சிகளை சொல்லி கொடுக்கிறேன்,வெளியில் போகும் போது மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க முடியும் என்று கூற,அவனும் அதன் மூலம்,அங்கு நடக்கும் மர்மங்களை பற்றி ஏதோ சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்டான்.

அவளும் உடம்பில் உள்ள சில உறுப்புகளின் முக்கியத்துவத்தை

கூறவும்,அங்கு நடக்கும் தில்லு முல்லு அதை பற்றி தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான்.

சில மாதங்களுக்கு பிறகு,அங்கு பயிற்சி பெற்று அதற்கு ஒரு பட்டமும் பெற்று கொண்டு வெளி உலகிற்கு அதை பற்றி போதிக்கும் ஒரு பயிற்சி ஆசிரியர் ஆக வந்தான்.

வந்து ஒரு வாரத்தில் அங்கு நடக்கும் 

வியாபாரங்கள் பற்றி ஒரு கட்டுரையாக அவனுடைய தினசரியில் வெளி வந்தது.முக்கியமாக அங்கு வந்து சேரும் இளம் பெண்களை வெளிநாட்டில் உள்ள கிளைகளுக்கு அனுப்பி,அந்த பெண்களை வாடகை தாயாக பயன் படுத்தி,நிறைய குழந்தைகள் பெற்று,அதை விற்று பெரும் பணம் சம்பாதிப்பது தான் அதன் நோக்கம் ஆக இருந்தது.அந்த பெண்களுக்கும் ஏராளமான பணத்தை கொடுத்து, ராஜ வாழ்க்கையை கொடுத்து அடிமை படுத்தி வைத்து இருந்தனர்.சில சட்டங்களின் ஓட்டையை பயன் படுத்தி எந்த புகாரும் இன்றி செயல் பட்டு வந்தது வெளிநாடு சென்ற பெண்கள்,அங்கு இருந்த உல்லாச வாழ்க்கையை விரும்பி,பெற்றோரை மறந்து,தான் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் வாழ்ந்து வந்தனர்.இதை கண்டு பிடித்து சொன்ன ராஜாவிற்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தன.





Rate this content
Log in

Similar tamil story from Crime