விதி
விதி
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எடுத்துச்செல்ல முடியவில்லை
நடக்கப்போவது நல்லதாக அமையும் என்று எவ்வித உத்திரவாதமும் இல்லை
நடந்து முடிந்ததை எல்லாம் நல்லதென்று நினைக்க தோன்றவில்லை
நம்பிக்கையும் மனதைரியமும் அடுத்த விடியலை நோக்கிப் பயணிக்கச் செய்கிறது
தோல்விகளும் அவானங்களும் துரோகங்களும் நம்மை துவண்டு விட செய்தாலும்
விடாமுயற்சியும் வெற்றியும் பாராட்டுகளும் வாழ்வில் நம்மை முன்னேற்றிவிடும்
விதி என்று நினைக்காமல் விதிக்கப்பட்டது என்று எண்ணாமல் துணிவோடு
வாழு வழி பிறக்கும் ஒளி உண்டாகும் இருள் விலகும் எண்ணங்கள் கைகூடும்
வானளவு உயரம் கிட்டும் வசந்தம் நிறைந்த வண்ணமயமான காலம் வரும்...