காதல் பரிசு
காதல் பரிசு
உன் காதல் கடலில் மணலாய் கரைந்தேன்;
உன் உரையாடல்களில் பிறைநிலவாய் தேய்ந்தேன்;
உன் சுவாசக் காற்றினில் பூவாய் மலர்ந்தேன்;
உன் புன்னகையில் பூவுலகம் மறந்தேன்;
உன் நினைவில் மெழுகாய் உருகினேன்;
உன் முகம் பார்த்து வெண்பனியாய் உறைந்தேன்;
உன் கைக்கோர்த்து நடக்கயில் இறகாய்ப் பறந்தேன்;
உன் மடியில் உறங்க மழழையாய் மாறினேன்;
உன் தோளில் சாய்ந்து தோழியாய் தோன்றினேன்;
உன் கரம் பிடிக்கும் அந்த நொடி கண் கலங்கினேன்;
உன்னை எனதாய் ஏற்று உன் துணையாய் ஆனேன்;
மீண்டும் நீ குழந்தையாய் மாறி என் மடி தவழ்ந்திட
உன் தாயாய் மாறி தாரமாய் வந்தேன்;
நான் நாமாக மாறிவிட நம்மைப்போல் ஓர் உயிர்
நம் காதலின் பரிசாக நம்மிடம் வந்ததே நம் காதலடா!!!