செல்லமடி நீ எனக்கு..
செல்லமடி நீ எனக்கு..
நிலவும் நீயும்
- வேறில்லை..
உன்நினைவை தவிர
- ஒன்றுமில்லை...
நிலவில்லாத வானம்..
காண்பதற்கு சுகமில்லை..
நீ இல்லாத வாழ்வு..
கற்பனைக்கும் எளிதில்லை..
காலம் என்னும் ஓடம்...
கற்றுத் தந்த பாடம்..
என் கண்கள் நனைத்து ஓடும்..
கனவில் உன்னை மட்டும் பாடும்..
ஏற்றங்கள் இருந்தும் ஏழையடி..
என்மாற்றத்திற்கு நீ என்றும் ஏணியடி...
சோகத்த சொல்ல சொற்கள் இருக்கு...
சொந்தம் தேவையில்ல செல்லமடி நீ எனக்கு.....