STORYMIRROR

Vignesh Swamynathan

Abstract

3.6  

Vignesh Swamynathan

Abstract

எனைச்சுடும் உன் இருவிழி..

எனைச்சுடும் உன் இருவிழி..

1 min
219


என்..

கவிதைகளின் வரி அவளே..

கனவுகளில் வருபவளே..


உன்..

நிழலெனவே வரும் நிலவே..

நினைவுகளே நிஜமெனவே..


என்..

முகவரியாய்க் கிடைத்தனவே

மரை இதழ்கள்..


உன்..

உதடுகளே உதிர்த்தனவென்

முதல் வரிகள்..


என்..

பகல்-இரவே..

பனி-வெயிலே..

நீ.. மகிழினியே..


உன்..

விழுமியங்கள்

அது தெரிந்தே

விழும் மீன்கள்.. மலரெனவே..


நான்..

மரம் தன்னில் ஒரு கிளை..

என்.. மனம் உந்தன் நினைவளை..


நீ..

நுனிப்புல்லில் பனித்துளி..

வான்..முகில் தந்த மழைத்துளி..


கண்..

பறித்தவளே.. கயல்விழியால்..

எரித்தவளே..

நிலவொளியில் நனைத்தவளே..


மண்..

மதித்தவளே.. மரபிணைகள்

மிதித்தவளே.. எனதுயிரில்

துளிர்த்தவளே..


நான்..

நுரை பொங்கும் கடல்அலை..

என்மனம் தன்னில் முதல்பிழை..


நீ..

எனில் சிந்தும் நிலவொளி.. தினம்

எனைச்சுடும் உன் இருவிழி..




Rate this content
Log in

Similar tamil poem from Abstract