ஒண்டி மகள்
ஒண்டி மகள்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
அழுதாலும் துடித்தாலும் உன் ஆத்தாளும்;
பெத்தால் ஆறு மகள்_என்ன நினைத்தாலோ?
உன்தாய்க்கு நீ ஓர் மகள்
அண்ணன்தம்பி எத்தனை என்ன?_நீ அழுதால்
ஓடிவர வேணுமென்று நினைக்கலயே
ஒத்தையிலே நிக்கிறப்போ_ உனக்காக ஓடிவர
அக்கா தங்கை உனக்கும் இல்லை_உன்னைப் போலே
என்னையும் பெற்றாய் _ உனக்கு எப்பவும் தோணலையோ
ஆலமரம் நிழலைப் போல எனக்கோரு நிழல் வேணுமென்று
அம்மா இல்லையென்றாலும் என் சித்தி வருவாலென்று
எனக்குச் சொல்ல ஆளுமில்லை_வழி வருவாரென
வந்தவரெல்லாம் சொந்தம் சொல்ல
பாவி மனம் ஏங்குகிறது அந்த ஒத்த சொல் வார்த்தைக்காக
நான் இருக்க கலங்கலாமோ என் அக்கா மகளே என்று_இன்னும்
எத்தனை நாள் ஏங்குவேனோ_ என்
நிலைமை இது தானோ?
பாவிமனதை துடிக்க வைத்தாய்
பாவமென்று தோணலையோ_ நீ செய்த
பாவத்திற்குத்தான் பாதியிலே சென்றாயோ......?
இத்தனையும் நான் சொன்னேன்_ என்
மகள் நிலையும் இதுதானோ?
மாறிவரும் உலகத்திலே மாறுகிறது எல்லாமே!
ஏன் இந்த பித்து மட்டும் மாறவில்லை தோணலையே......