யாரேனும் தனக்குரிய கண்களைத் தொலைத்து விட்டால்!
நிம்மதியாய் உறங்குவார்களா?
ஆனால் நான் உறங்குகிறேன்!
என் கண்களைத் தொலைத்து விட்ட பின்பும்!
நிம்மதியாய் உறங்குகிறேன்!
ஏனெனில் என் கண்களை!
என் வானவில்லின் அழகிய கண்களிடம்தான் - அதுவும்!
எனக்கு உரியவளிடம்தான் தொலைத்திருக்கிறேன்!
என்கின்ற மன நிம்மதியோடு!