பேசாத கடிதம்
பேசாத கடிதம்
பேசாத கடிதம்...
உன்கிட்ட பேசுற அளவுக்கு தைரியம்
இல்லை....நீயும் நான் பேசுவேன்னு
ஏமாந்து தான் போறனு எனக்கு நல்லாவே தெரியும்..அன்று மட்டுமல்ல இன்றும் உன் கண்ணில் உண்மை காதலை பார்க்கிறேன்....உன்னை தவிர யாரையும் என்னால நேசிக்க முடியல...நீ நினைக்கிற மாதிரி நான் தைரியசாலி இல்ல...இன்னும் உன்மேல இருக்குற பயம் போல...நீ என் கண்ணை பார்க்கும் போதுலாம் என் கை நடுங்க தான் செய்யும்...ஆனால்,உனக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்னு நல்லாவே தெரியும்...எப்போம் பார்த்தாலும் புத்தகம்,பேனானு தான் இருப்பன்னு தெரியும்....ஒரே ஒரு உண்மையே மட்டும் சொல்லுறேன்..."இந்த உலகத்துல எவ்வளவு அழகிகள் பிறந்தாலும் எனக்கு பிடித்த ஒரே அழகி நீ மட்டும் தான்"........
இப்படிக்கு
என் பெயரை சொல்ல தைரியமில்லாதவன்...👻👻
இந்த பேப்பரை யாரு என்கிட்ட கொடுக்க சொன்னாங்க ப்ளீஸ் சொல்லு பா தம்பி என்று தர்ஷினி டியூசன் படிக்கிற பையன்கிட்ட கெஞ்சிக்கொண்டு இருந்தாள்....
அந்த அண்ணா யாருனு சொல்ல கூடாதுனு சொல்லிட்டாங்க......லஞ்சமா 100 ரூபாய் சாக்லெட் கொடுத்தாங்க...
50 ரூபாப் சாக்லெட் வாங்கி தாரேன்...யாருனு சொல்லு தம்பி...
அவங்க பெரு வ எழுத்துல தான் ஆரம்பிக்கும்....அப்புறம்,நீங்க உங்க வீட்டுல பார்க்குற பையனே கட்டிக்கணும்மாம்..னு சொல்லிட்டு ஓடிட்டாங்க அக்கா...
என் வருண் தான் அப்படி சொல்லிட்டானா??எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ண போறாங்கனு தெரிஞ்சி தான் இப்படி பேப்பரை கொடுத்து அனுப்பி இருக்கான்...
எப்படியோ "என்னை பிடிச்சிருக்கு,அழகினு சொல்லிட்டான் அதுவே போதும்"என்று கண் கலங்கினாள் தர்ஷினி.....