சுதந்திரம்
சுதந்திரம்
வெகுளி என்ற பெயரை பெற்றவள்
ஒருநாள் வீரமங்கையானாவள்..
அவளை மாற்றியதோ காதல் தான்..
வெகுளி என்ற பெயரை பெற்றவன்
ஒருநாள் வீரமன்னன்யானான்..
அவனை மாற்றியதோ காதல் தான்..
எப்போதும் போல நட்பை தேடும்
பயணம் இருவருக்கும் தொடர்ந்தது..
அப்போது ஆன்லைனில் பேசிக்கொண்டனர்...
இருவருக்கும் நட்பின் ஆழம் அதிகமானது....
இருவரும் உண்மையான முகத்தையும்
உண்மையான அன்பாகவும் பேசிக்கொண்டனர்..
இப்படியே நட்பும் நகர்ந்தது...
ஒரு கட்டத்தில் இருவருக்கும்
பிரிவு என்பது வந்தது..
பிரிவில் புரிந்தது காதல் தான்
என்று....
இருவரும் மனம் விட்டு நம் காதலை
வெற்றியடையச்செய்வோம்..
என்ற முடிவுக்கு வந்தனர்...
வீட்டில் பேச தைரியமும் வர..
ஆன்லைன் காதலை யாரும்
நம்ப மாட்டார்களே..
பெற்றோர் நம்புவார்களா??
இதில் வேற தொலைவு அதிகம்..
இருவரும் வீட்டில் சமதம் வாங்க
போராடினார்கள்...
இருவரும் தீர்க்கமான
முடிவில் இருப்பதால்
பெற்றோரின் அனுமதியில்லாமல்
திருமணம் நடந்தது...
திருமணதிற்கு பிறகு வறுமை
தொடர்ந்தது...
இருவரும் வேலைக்கு சென்று
சம்பாதித்து கொஞ்சம் கொஞ்சமாக
முன்னேறினர்...
இந்த வாழ்க்கையில் சில நாட்கள்
பட்டினியில் இருந்தாலும்
காதலுக்கு குறைவந்ததில்லை..
ஒருநாள் அல்ல பலநாள்
இரவும் பகலும் உழைத்து
முன்னேறினார்கள்...
காதல் வாழ வைக்கும்
பிள்ளைகள் எடுத்த முடிவு
நல்ல முடிவு தான்..
உண்மையான காதல் தான்
என்று வாழ்ந்து காட்டினார்கள்..